பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியில் அனுப்பட்டது பெரும் விவாதமாக வெடித்த நிலையில், கமல்ஹாசன் ஏன் இந்த முடிவில் உறுதியாக இருந்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், முதல் நாளில் இருந்தே பிரச்சனைகள் தொடங்கியது. இதில் குறிப்பாக பிரதீப் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் தனியாக தெரிந்தாலும், பலரும் அவரைப்பற்றி கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனாலும் பிரதீப் தனது வேலையில் கவனம் செலுத்தி வந்த நிலையில், அவ்வப்போது கோபத்தில் வார்த்தைகளை பேசிவிடுவார்.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மாயா, பூர்ணிமா, ரவீனா, ஜோவிகா ஆகியோர் பிரதீப்க்கு எதிரான உரிமை குரல் எழுப்பி, அவரால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருந்தனர். இதனை விசாரித்த தொகுப்பாளர் கமல்ஹாசன், மற்ற போட்டியாளர்களின் கருத்தை கேட்டுவிட்டு, பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியில் அனுப்பிவிட்டார். கமல்ஹாசனின் இந்த முடிவு பெரும் விவாதமாக மாறியது.
அனைவரிடமும் கருத்து கேட்ட கமல் பிரதீப்பிடம் ஏன் கேட்கவில்லை என்று பேசப்பட்ட நிலையில், கமல் பிறந்த நாளில் அவரை சுட்டிக்காட்டும் விதமாக பிரதீப் வெளியிட்ட பதிவு வைரலாக பரவியது. இதனிடையே தற்போது கமல் ஏன் பிரதீப்பிடம் விளக்கம் கேட்காமல் வெளியில் அனுப்பினார் என்பதற்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது. பிரதீப் குறித்து ரவீனா புகார் அளித்த போது தனது அர்னாகயிறு குறித்து பேசியதாக கூறியிருந்தார். அப்போது சில வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டது.
ரவீனாவின் இந்த வார்த்தைகளை கேட்ட கமல்ஹாசன் கோபமடைந்த நிலையில், அப்படி அவர் என்னதான் சொன்னார் என்பது குறித்து ரசிகர்களுக்கு இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது 24 மணி நேர எபிசோட்டில் சில காட்சிகள் வீடியோவாக வெளியிடப்பட்டடுள்ளது. இதில், ஒரு டாஸ்க் நடக்கும்போது நான் ஜெயித்தால் கக்காவை வாயில் வாங்கிகுவியா என்று பிரதீப் ரவீனாவை பார்த்து கேட்டுள்ளார். இதற்கு சீ..சீ என்று ரவீனா கூறியதை தொடர்ந்து கமல்ஹாசனிடம் இதை சொல்லும்போது மியூட் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த மாதிரி பேசிய பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்ததில் எந்த தவறும் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் கேமரா முன்பு பெண்களின் ஆடைகள் விலகி இருப்பதை சுட்டிக்காட்டி சரி செய்ய சொன்ன, பிரதீப் இப்படி ஒரு வார்த்தையை பேசலாமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“