New Update
![Biggboss task](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/qJD3RQRMRgtXOkIZ7gLM.jpg)
பிக்பாஸ் பூகம்பம் டாஸ்க்
பிக்பாஸ் பூகம்பம் டாஸ்க்
பிக்பாஸ் கொடுத்த கடினமாக 3 டாஸ்க்களில் 2 முடிந்துள்ள நிலையில், 3-வது டாஸ்க் குறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இது முடிந்தவுடன் தற்போதைய போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்களா அல்லது இவர்களை வெளியில் அனுப்பிவிட்டு முன்னாள் போட்டியாளர்கள் வருவார்களா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நாள் தோறும் பெரும் சண்டை வெடித்து வருகிறது. இதில் மாயா நிக்சன் பூர்ணிமா ஆகியோர் ஒரு கேங்காவும், விசித்ரா அர்ச்சனா ஆகியோர் மற்றொரு கேங்காவும் மோதிக்கொண்டுள்ளனர். இதில் அவ்வப்போது ஒருவர் குறித்து மற்றொருவர் புரளி பேசுவதும், ஆக்ரோஷமாக சண்டை போடுவதும் என் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்துள்ளனர்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் பூகம்பம் என்று அறிவித்த பிக்பாஸ் 3 டாஸ்க்கள் நடக்கும். இதில் பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸ் வெற்றி பெற்றால் வீட்டில் இருக்கலாம் தோல்வியடைந்தால் அவர்கள் வெளியேற்றப்பட்டு ஏற்னவே வெளியில் சென்ற போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி ஏற்கனவே முதல் இரு டாஸ்க்கள் முடிந்துவிட்ட நிலையில், 3-வது டாஸ்க் குறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட சீசாவின் ஒருமுனையில் கால்களை வைத்துக்கொண்டு மறுமுனையில் இரும்பு லாட்களை எதிர்முனையில் அடுக்க வேண்டும். இதில் ஜோவிகா சீசாவின் முனை கீழே பட்டுவிட்டதால் அவர் அவுட் ஆகிவிட்டார். அதன்பிறகு சில போட்டியாளர்கள் முயற்சிக்கின்றனர். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த 3 டாஸ்க்குகளில் பிக்பாஸ் போட்டியாளர்கள் வெல்வார்களா அல்லது தோற்பார்களா என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.