உள்ளாடை குறித்த சர்ச்சை... அடுத்தடுத்து குவியும் புகார் : பிக்பாஸ் எங்கே செல்கிறது?
ஒரு கோர்ட் உருவாக்கப்பட்டு, ஒருவர் மற்றவர் மீது வழக்கு தொடராலம் என்று கூறப்பட்டது. இதில் மாயா அன்கோ vs விசித்ரா அன்கோ இருவரும் மாறி மாறி புகார்கள் கூறி கோர்ட்டில் வாதாடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோக்கள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் தினேஷ் மாயா டீம் பற்றி அதிரடியாக கருத்துக்களை கூறியுள்ளார்.
Advertisment
கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிழ்ச்சியின் 7-வது சீசன் 40 நாட்களை கடந்துள்ள நிலையில், நிகழ்ச்சியில், இருந்து 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். மேலும் பிக்பாஸ் ஸ்மால்பாஸ் என இரு வீடுகள் இரு நாமினேஷன்கள் என பரபரப்பாக இயங்கி வரும் பிக்பாஸ் வீடுகளில் நான்தோறும் களேபரங்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று வீட்டிற்குள் ஒரு கோர்ட் உருவாக்கப்பட்டு, ஒருவர் மற்றவர் மீது வழக்கு தொடராலம் என்று கூறப்பட்டது. இதில் மாயா அன்கோ vs விசித்ரா அன்கோ இருவரும் மாறி மாறி புகார்கள் கூறி கோர்ட்டில் வாதாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரமோவில், தினேஷ் மற்ற போட்டியாளர்கள் குறித்து பேசுகிறார். இங்க ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு டிக்னிட்டி இருக்கு. அவங்களுக்குனு ஒரு ரெக்ஸ்பெக்ட் இருக்கு என்று சொல்கிறார்.
இதை கேட்டு மாயா இது டெப்னெட்டா காமெடியில் இரு இது என்று சொல்கிறார். அடுத்து வரும் அர்ச்சனா இதே ஒரு ஆண் அவர்கள் உள்ளாடையை எடுத்து கமெண்ட் செய்திருந்தால் என்று கேட்க, மாயா அன்கோ வாயடைத்து போகின்றனர். தொடர்ந்து பேசும் நிக்சன், நான் இப்படி நடந்ததை பார்த்திருந்தால் உடனே கேட்டிருப்பேன் என்று சொல்கிறார். இதனைத் தொடர்ந்து விஷ்ணு தனது தரப்பு வாதத்தை தொடங்க அத்துடன் முதல் ப்ரமோ முடிவடைகிறது.
தொடர்ந்து வெளியாகியுள்ள 2-வது ப்ரமோவில், ரவீனாவின் வளர்ச்சிக்கு மணி தான் தடையா இருக்கிறார் என்று நிக்சன் சொல்கிறார். அதேபோல் ஐஷூ வளர்ச்சிக்கு அவர் தடையாக இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தனது வாதத்தை முன் வைக்கிறார். இதை கேட்ட நிக்சன் ஒரு பாதுகாப்பு எண்ணத்தில் அவர் ரவீனாவுக்கு செய்வதை தான் நான் ஐஷூக்கு பண்றேன் என்று சொல்கிறார்.
இதை கேட்ட மணி, நிக்சனின் பாதுகாப்பு ஐஷூ-வை பாதித்தது அவர் என்னிடம் வந்து தனியாக பேசினார் என்று சொல்கிறார். இதன்பிறகு வெளியில் வந்ததும் மணி – நிக்சன் இடையே மோதல் உருவாகிறது. இதில் நீ சொன்னதை எல்லாம் நான் சொல்ல எல்லாமே காலி என்று மணி எச்சரிக்கை கொடுக்க அத்துடன் முடிகிறது ப்ரமோ.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“