பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் யார் என்பதை தேர்வு செய்ய கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என புதிய விதிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிக்ழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் பவா செல்லதுரை தானாக வெளியேறியதால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை.
தொடர்ந்து கடந்த வாரம் முதல் வாரத்தின் கேப்டன் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் 15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 29-ந் தேதி வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, கானா பாலா, அன்னபாரதி, ஆர்.ஜே.பிராவோ ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் விதமாக வெளியாகியுள்ள இந்த ப்ரமோவில், இந்த வாரத்திற்கான கேப்டன் யார் என்பதை தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் கூற பிரதீப் உட்பட பலரும் கூல் சுரேஷ் அடுத்த கேப்டன் என்று சொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து கல் போன்று வைக்கப்பட்டுள்ள ஒரு மேட்டின் மீது ஒற்றை காலிலில் நிற்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
மேலும் இந்த டாஸ்கில் அதிக நேரம் யார் நிற்கிறார்களே அவர்கள் தான் இந்த வார கேப்டன் என்று பிக்பாஸ் சொல்கிறார். இதனைத் தொடர்ந்து அனைவரும் டாஸ்கில் இறங்குகின்றனர். இதில் கூல் சுரேஷ் அதிக நேரம் நிற்பதாக தெரிகிறது. அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“