Advertisment

பீரியட்ஸ் நேரத்துல கேமரா முன் எதற்காக நாடகம்? விசித்ரா- அர்ச்சனா சண்டை

பிக்பாஸ் கொடுத்த பூகம்பம் டாஸ்கின்போது, மாயா, விசித்ரா இடையே சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து அர்ச்சனா – விசித்ரா மடையே விரிசல் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

author-image
WebDesk
New Update
Archana Vichithra

அர்ச்சனா - விசித்ரா

நெருக்கமாக இருந்த விசித்ரா – அர்ச்சனா இருவரும் தற்போது எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ள நிலையில், அர்ச்சனாவின் பீரியட்ஸ் குறித்து விசித்ரா கூறிய கருத்து இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், வாரத்திற்கு ஒருவர் என சிலர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது சுமார் 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் வைல்ட் கார்டு என்டரியாக உள்ளே வந்த அர்ச்சனா ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்த விசித்ராவுடன் நெருக்கமாக இருந்தார்.

விசித்ரா அர்ச்சனா தினேஷ் ஆகியோரும், மாயா, பூர்ணிமா ஜோவிகா, ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டனர். ஆனால் பிக்பாஸ் கொடுத்த பூகம்பம் டாஸ்கின்போது, மாயா, விசித்ரா இடையே சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து அர்ச்சனா – விசித்ரா மடையே விரிசல் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். மாயா பேசினால் போதும் எனக்கு யாரும் தேவையில்லை என்பது போல் தற்போது விசித்ரா நடந்துகொண்டுள்ளார்.

இதனிடையே நேற்று 5 ஸ்டார் டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தான் 5 ஸ்டார்களை பெறுவதற்காக தன்னை எவ்வளவு சிறந்தவர் என்பதை சொல்லி போராடலாம். அதேபோல் மற்றவர்களின் குறைகளையும் சுட்டிக்காட்டலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இதில் பங்கேற்ற அனைவரும், தாங்கள் தான் இந்த வீட்டில் சிறந்த போட்டியாளர் என்று கூறி வந்தனர்.

ஆனால் அர்ச்சனா, தினேஷ் இருவரும் விசித்ராவை விமர்சித்த நிலையில், நீங்கள் கேமரா முன்பு தான் நல்லவர் போல் தன்னை காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கண்டமேனிக்கு திட்டி அவர் மீது குறை மேல் குறை சொல்கிறீர்கள். அதன்பிறகு் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகுறீர்கள். அதுவும் பலரை கூப்பிட்டு வைத்துக்கொண்டு தான் நல்லவள் என்பதை நிரூபிக்க பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட விசித்ரா, நான் மட்டும் தான் கேமரா முன்னாடி நடிக்கிறேனா? நீங்கள் எதுவும்நடிக்கவில்லையா? அன்னைக்கு அர்ச்சனா பீரியட்ஸ் நேரத்தில் எதற்காக கேமரா முன்னாடி போய் பேசிக்கொண்டிருந்தா? அப்போ நீயும் அனுதாபம் தேடினியா என்று கேட்க, நீங்க இவ்வளவு சீப்பா பேசுவீங்கனு நான் எதிர்பார்க்கல. இதுவரைக்கும் உங்களை மேம் என்ற சொல்லை விட வேற சொல் பயன்படுத்தி கூப்பிடவே இல்லை.

உங்களிடம் எந்த இடத்திலும் நான் நடித்தது கிடையாது. ஆனால் நீங்கள் இவ்வளவு சீப்பாக என்னுடைய வலியை பற்றி நான் பேசியதை பற்றி பேசிவிட்டீர்கள் என்று புலம்ப, அர்ச்சனா நடிக்கிறார் என்றால், நீங்கள் எதற்காக அவரிடம் மாத்திரை வேண்டுமா என்று அதே கேமரா முன்பு நின்று கேட்டுக்கொண்டிருந்தீர்கள்? அர்ச்சனா நடிக்கிறாங்கனு தெரிஞ்சி நீங்களும் நடிச்சீங்களா? என்று கேட்டிருந்தார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆரம்பத்தில அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசி அவருக்கு துணையாக மாயா குருப்பிடம் சண்டை செய்த விசித்ரா இப்போ மாயா குருப்புடன் சேர்ந்து அர்ச்சனாவின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி இப்படி பேசலாமா என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment