விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்து புதிய திருப்பமாக வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வருவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுளளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த ரியாலிட்டி ஷோ நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில், இந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஐந்து பிரபலங்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி ஆக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக யார் உள்ளே வரப்போகிறார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி வி.ஜே.அர்ச்சனா, கானா பாலா, கே.பி.ஒய்.பாலா, மானசி கண்ணன், சாம் சாமுவேல் ஆகியோர் என்டரி ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அக்டோபர் 29-ம் தேதி வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரசிகர்களின் ஓட்டுகள் அடிப்படையில் கடந்த வாரம் விஜய் வர்மா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது வெளியேற்றம் ஹவுஸ்மேட்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் கூல் சுரேஷ் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்தார். முதல் வாரம் அனன்யா எஸ் ராவ், அடுத்து பவா செல்லதுரை தானாக வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து 3-வது நபராக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, நிக்சன், பிரதீப் ஆண்டனி, வினுஷா, விஷ்ணு, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், மணிச்சந்திரா, யுகேந்திரன், அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சர்வணா விக்ரம் உள்ளிட்ட 11 போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் இருந்து வார இறுதியில் யார் வெளியேறுவார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“