New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Abirami.jpg)
நடிகை அபிராமி வெங்கடாச்சலம்
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் அபிராமி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
நடிகை அபிராமி வெங்கடாச்சலம்
திரையுலகில் ஒரு நடிகைக்கு மார்கெட் வீழ்ச்சியை சந்திக்கும்போது அவர்கள் வித்தியாசமாக சில புகைப்படங்களை வெளியிட்டு தங்களை ஆக்டீவாக வைத்துக்கொள்வது வழக்கம். இதில் சில நடிகைகள் கவர்ச்சியில் களமிறங்கயி நிகழ்வுகள் நடைந்துள்ளது. தற்போதுவரை இந்த வழக்கம் தொடர்ந்து வரும் நிலையில், தங்களை பற்றி பரபரப்பாக பேச வேண்டும், ரசிகர்கள் மத்தியில் தங்கள் ஞாபகம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த யுக்தி கையாளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை ஒருவர் வித்தியாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாச்சலம், அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் 3 நாயகியகளில் ஒருவராக நடித்திருந்தார். படம் வெளியாகும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அபிராமி வெளியில் வந்து சக போட்டியாளர்களுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார்.
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் அபிராமி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் அபிராமி, சமீபகாலமாக புதிய படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தனது ஆன்மீக ஆர்வத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் தனது படுக்கையறை புகைப்படத்தை அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் ஒன்றில், நடராஜர் சிலையை தனது முதுகில் டாட்டூவாக குத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.