Advertisment

கோபம் வந்தால் அந்த வார்த்தையும் பேசுவேன்... பிக்பாஸ் தாமரை சொல்வது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் சினிமா வாய்ப்பு பெற்றுள்ள நிலையில், மக்கள் மத்தியிலும் பலர் வரவேற்பை பெற்று வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Biggboss Thamarai

பிக்பாஸ் தாமரை

பிக்பாஸ் வீட்டுக்குள் நான் செய்யாத ஒரே விஷயம் இதுதான் என்று பிரபல மேடை கலைஞரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான தாமரை கூறியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் சினிமா வாய்ப்பு பெற்றுள்ள நிலையில், மக்கள் மத்தியிலும் பலர் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரை. 5-வது சீசனில் பங்கேற்ற இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர், மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வாய்ப்பாக அமைந்தது. தொடக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினாலும் அடுத்தடுத்து புரிந்துகொண்டு சரியாக விளையாடி அசத்திய தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது கணவருடன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த தாமரை பேசுகையில், எனக்கு கோபம் வந்தால் முதலில் அடித்துவிடுவேன். அதன்பிறகு தான் பேசுவேன். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டில் பண்ணாத ஒன்று இதுதான். கோவம் வந்துவிட்டால் கெட்டவார்த்தையில் பேசுவேன். அதேபோல் இரவில் என்னால் தூங்க முடியாது. நான் 12 வயதில் இருந்தே இரவில் ப்ரோகிராம் பண்ணுவதால் மாதம் முழுவதும் கூட இரவில் தூங்காமல் இருப்பேன்.

அதிகாலை 4 மணிக்கு மேல் தான் முயற்சி செய்து தூங்குவேன். அதேபோல் பகலில் தூங்கிக்கொண்டே இருப்பேன் நான் காலை எழுந்திருக்கும்போது எனது மாமியார் அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துவிடுவார். எனது கணவர் காபி கேட்டாலும், அவரையே போட்டு வர சொல்வேன் அதற்கு சண்டை நடக்கும். இதை கேட்டுவிட்டு எனது மாமியாரே காபி போட்டு எடுத்து வந்துவிடுகிறார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வநதவுடன் என் கையில் பணம் இல்லை. அப்போது எனக்கு உதவி செய்தவர் ஐக்கி பெர்ரி. இப்போதும் எங்களுக்குள் சண்டை என்றால் முதல் ஆளாக வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment