New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/21/8PhL88mHEIBtxZNdTHHU.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக அர்னவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத அன்ஷிதா கதறி அழுதுள்ளார்.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில், அடுத்த எலிமினேஷனாக சீரியல் நடிகர் அர்னாவ் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அவர் வெளியில் செல்வதை பார்த்து அன்ஷிதா அழ தொடங்கிவிட்டார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. வழக்கமான தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில், நடிகர் ரஞ்சித், தீபக், அர்னவ், சத்யா, பவித்ரா ஜனனி, வி.ஜே.விஷால், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நானே, ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் ஏற்பட்ட மோதலில், சாச்சனா தான் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆவதாக சொல்லிவிட்டு முதல் நாளே வெளியேறினார். பிக்பாஸ் வரலாற்றில் 24 மணி நேரத்தில் நடந்த முதல் எலிமினேஷன் என்று பலரும் கூறி வந்த நிலையில், அடுத்து 2 நாட்களில் சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அந்த இரு தினங்களும் யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பது குறித்து கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய வீக் எண்ட் எபிசோட்டில், அர்னவ் வெளியேற்றப்பட்டார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில், தர்ஷா குப்தா, முத்து, மற்றும் அர்னாவ் ஆகியோர் இடமபெற்றிருந்த நிலையில், அர்னாவ் வெளியேற்றப்படுவதாக தொகுப்பாளர் விஜய் சேதுபதி கார்டை காட்டினார். இதன் காரணமாக அர்னவ் வெளியேற தயாரான நிலையில், அவர் எலிமினேஷன் என்று விஜய் சேதுபதி அறிவித்த உடனே, அன்ஷிதா அழ தொடங்கிவிட்டார். தொடர்ந்து நீண்ட நேரம் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
அதன்பிறகு அர்னவ் கோபமாக தெரபியை உடைத்துவிட்டு வெளியேறும்போது அன்ஷிதா மேலும் அழத் தொடங்கிய நிலையில், சுனிதா உள்ளிட்டோர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.