பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் எழுந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில், திட்டம் போட்டு ஒருவரை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பி அவர் வாழ்க்கையை வீணாக்கிவிட்டீர்கள் என்று விசித்ரா மாயா மற்றும் பூர்ணிமாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந தேதி தொடங்கியது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 3 வாரங்கள் முடிவில் அனன்யா ராவ், விஜய் வர்மா மற்றும் (தானாக வெளியேறிய) பவா செல்லதுறை ஆகியோர் வெளியேறியதை தொடர்ந்து 15 போட்டியயாளர்கள் உள்ளே இருந்தனர். தொடர்ந்து கடந்த வாரம் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் நிகழ்ச்சியின் உள்ளே வந்தனர்.
அதே வாரம் யுகேந்திரன் மற்றும் விணுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டது. இதனிடையே 5-வது வார இறுதியான நேற்று முன்தினம், மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வந்த பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் உள்ள யாருக்கும் அவரை பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் இருந்து மக்களின் சப்போர்ட் அவருக்கு இருந்ததால், தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.
ஆனாலும் அவரால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, தூங்குவதற்கு பயமாக இருக்கிறது என்று கூறிய மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்ட சிலர் உரிமை குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளரையும் தனியாக அழைத்து பிரதீப் இந்த வீட்டில் தொடரலாமா அல்லது வெளியேற்றலாமா என்று கேட்டார். இதில் பலரும் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இறுதியாக கண்ஷப்ஷன் அறைக்கு வந்த பிரதீப்பிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் நீங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று சண்டை போட வேண்டாம். இப்படியே வெளியில் வாருங்கள். உங்கள் லக்கேஜ் உங்களுக்கு வரும் என்று கூறியதை தொடர்ந்து பிரதீப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து அவர் ரெட் கார்டு வைத்து வெளியிட்டுள்ள 2 புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே பிரதீப் வெளியேற்றப்பட்டது சமூகவலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவான கருத்துக்கள் தொடர்ந்து வருகிறது. அதேபோல் பிக்பாஸ் வீட்டிலும் பிரதீப் வெளியேற்றம் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. இதில் இந்த வார நாமினேஷனில் ரெட் கார்டு குறித்து கேள்வி எழுப்பிய விசித்ரா இந்த விவகாரத்தில் குருப்பாக விளையாடிட்டீங்க என்று நாமினேஷன் செய்துள்ளார்.
இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம் தெரியுமா என்று விசித்ராவிடம் மாயா வாக்குவாதம் செய்ய, ஸ்மால்பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா மற்றும் விசித்ரா இருவரும் மாயாவுக்கு பதிலடி கொடுக்கின்றனர். வுமன் கார்டு எவ்வளவு பவர்ஃபுல் ஆனது என்று உங்களுக்கு தெரியும். மனசாட்சி பிரகாரம் இதை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் பிரச்சனை இல்லை. அதை சரியா யூஸ் பண்ணல அப்படினா நீங்க ஒருத்தர் வாழ்க்கையை அழிச்சிருக்கீங்க, மனசுல வச்சிக்கோங்க என்று அர்ச்சனா சொல்கிறார்.
இதை கேட்ட பூர்ணிமா அதிர்ச்சியில் வாயடைத்து போய் நிற்கிறார் அத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் பிரதீப்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.