Advertisment

Bigg Boss Tamil 5: அசிங்க அசிங்கமா பேசி விடுவேன்... தாமரைச் செல்வியுடன் மோதிய நமீதா!

Tamil Biggboss Update : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது மோதல் போக்கு தொடங்கியுள்ள நிலையில், நேற்று நமிதா மாரிமுத்து தாமரைச்செல்வி இடையே மோதல் ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 5: அசிங்க அசிங்கமா பேசி விடுவேன்... தாமரைச் செல்வியுடன் மோதிய நமீதா!

Biggboss Season 5 Update : ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது காரசாரமான விவாதம் மற்றும் வாக்குவாதம் நடக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு எப்படி இருந்த்து?

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே கடுமையாக மோதல் வெடித்துள்ளது நேற்று இரவு சக போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், தாமரை செல்வி ராம்ப் வாக் செய்தார். இதனைத் தொடர்ந்து சிலர் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், பிரியங்கா நமிதா உள்ளிட்ட சிலர் மாஃபியா கேம் விளையாடினர்.

இதில் யார் மாஃபியா என்ற போட்டியில், நமிதாவை வென்றார் பிரியங்கா. அப்போது தாமரைச்செல்வி, நமீதாவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் பிரியங்கா, நமீதா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் சிரித்து பேசிக் பேசிக்கொண்டிருக்கும்போது  நாளைக்கு செம சண்டை இருக்கு.. உங்களுக்கும் எனக்கும்தான் என்று நமீதா மாரிமுத்து சொல்கிறார்.

நமிதா விளையாட்டாக சொன்ன அந்த வார்த்தை பெரும் மோதலாக வெடிக்கிறது. அப்போது இடையில் வரும் பிரியங்கா, நீ நமீதாவை சிரித்து வெறுப்பேற்றுகிறாய் என்று தாமரைச்செல்வியிடம் சொல்கிறார். அதன்பின்னர் படுக்கையறைக்கு செல்லும், தாமரைச்செல்வி அங்கேயும் சிரித்தபடியே இருக்கிறார். இதனால் பிரியங்கா மீண்டும் அவரை எச்சரிக்கிறார்.

இதனால் கடுப்பாகும் நமிதா, என்னை எப்படி ஏமாற்றுகிறேன் என்று சொல்லலாம் என்று கேட்க, தாமரைச்செல்வி அதை கேட்டு கண்ணீர் விடுகிறார். இதை பார்த்த மீண்டும் கோபமாகும் நமிதா, சினிமாவில் கண்ணீர் விடுங்க இங்கேல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். இதன்பின்னர், தாமரை செல்வி மீண்டும் பேசத் தொடங்க அந்த டாப்பிக் பத்தி பேசினா அசிங்க அசிங்கமா கேட்பேன், யார் இருக்காங்க என்று பார்க்க மாட்டேன் என்று கடுமையான பேசிவிடுகிறார்.

இதனை பார்த்து மொத்த போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இதன்பின்னர் கார்டன் ஏரியாவில் இருந்த தாமரைசெசெல்வி, நமீதாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் நமீதா அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகிறார். அதனைத் தொடர்ந்து  கிச்சன் ஏரியாவில் பிரியங்கா மற்றும் நிரூப்பிடம் பேசிய நமீதா, தாமரை செல்வி தன்னிடம் நீதான் எல்லோரையும் மயக்குவியே அதுமாதிரி எனக்கு கத்துக்கொடு என்று சொல்லியதாகவும், நான் சிரிப்பதா என்று கேட்டபோது,  இல்லை மயக்குவது என தாமரைச்செல்வி சொல்லியதாக கூறி நமீதா கோபப்படுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment