Biggboss Ultimate Update In Tamil : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத் பிக்பாஸ் குழந்தை தனது வயிற்றில் வளர்வதாக கூறியள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இந்நிகிழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். எவ்வித தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளர்களுக்குள் நடக்கும் முட்டலும் மோதலுமே இந்நிச்சியின் முக்கிய கருவாக உள்ளது.
கடந்த அக்டோர் 3-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் விஜய் டிவியின் சீரியல் நடிகர் ராஜூ ஜெயமோகன் சாம்பியன் பட்டம் வென்றார். இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமான டிவியில் ஒரு மணி நேரம் மட்டுமே காட்டப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மாறாக பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரமும் ஒடிடி தளமாக டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசனகளில் குறிப்பிட்ட சில போட்டியார்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்ற அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் கடந்த சீசனுக்கு கனக்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் பலரும் காமெடியாக எதையாவது பேசி வருகின்றனர். இதில் பிக்பாஸ்-ஐ கலாய்க்கும் படியாகவும் பேசி வருவது வழக்கம் தான்.
ஆனால் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எல்லை மீறும் அளவுக்கு காமெடி என்ற பெயரில் போட்டியாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகினறனர். அந்த வகையில் போட்டியாளர் அனிதா சம்பத் பிக்பாஸ் குழந்தை தனது வயிற்றில் வளர்வதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனிதா தாமரையுடன் சேர்ந்து பிக்பாஸ் மனைவி ஜூலி என்றும், உங்க மனைவி ரொம்ப மோசமா நடந்துக்கிறாங்க என்று பிக்பாஸிடமே புகார் கொடுப்பது போலவும் பேசி வருகினறனர். இவர்களின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அனிதா மற்றும் தாமரையை கடுமையான விமர்சித்து வருகின்றனர். கனக்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி சர்ச்சையான பேசலாமா என்று கேட்டு வருகின்றளனர். ஆனால் ஒரு சிலர் இது காமெடியாக பேசப்பட்டமு என்றும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். ஆனாலும் இந்த விவகாரம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “