/indian-express-tamil/media/media_files/2025/09/03/kpy-bala-2025-09-03-08-43-26.jpg)
கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியான கே.பி.ஒய்.பாலாவின் காந்தி கண்ணாடி திரைப்படம் பாசிட்டீவான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது படத்திற்கு ஸ்கிரீன்ஸ் அதிகம் கொடுத்திருப்பதால், அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாலா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.. திரை நட்சத்தரங்கள் பலரும் பாலாவின் செயலுக்கு உதவி வருகின்றனர்.
2018-ம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், புலிக்குத்தி பாண்டி, லாபம், நாய் சேகர், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான, சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடத்தில் நடித்திருந்த பாலா, காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். படத்தின் ரிலீஸ்க்கு முன்பே விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சினிமா நண்பர்களுக்காக இந்த படம் திரையிடப்பட்டது.
இந்த படத்தை பார்த்த அனைவருமே இந்த படத்திற்கு பாசிட்டீவான விமர்சனங்களை கூறியிருந்த நிலையில், காந்தி கண்ணாடி படம் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியான நாளில் தியேட்டரில், பேனர் கிழிக்கப்பட்டது, ஷோ கேன்சல் செய்யப்பட்டது குறித்து படத்தின் இயக்குனர் பேசியிருந்தார். ஆனால் தற்போது படத்தின் பாசிட்டீவ் விமர்சனங்களுக்காக அதிகம் ஸ்கிரீன்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ள பாலா நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரொம்ப முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கிறேன். நமது காந்தி கண்ணாடி திரைப்படம் ரிலீஸ் ஆகி 5-வது நாள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறநது, இந்த படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள் என்று நீங்கள் சமூகவலைதளங்களில் படத்திற்கு கொடுத்த ஆதரவின் காரணமாக இப்போது ஸ்க்ரீன்ஸ் அதிகம் கொடுத்திருக்கிறார்கள். இந்த வரவேற்பை பார்த்துவிட்டு படம் ரிலீஸ் ஆகாத ஊர்களில் கூட ஷோக்கள் கொடுத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு தியேட்டர் சென்றிருந்தபோது, ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டரில் கொலுசு சத்தம் கேட்குது, குடும்பம் குடும்பமாக வந்து படம் பார்க்கிறார்கள் என்று சொன்னார், இதற்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எவ்வித பின்புலமும் இல்லாமல் மக்களை நம்பி ஒரு படம் எடுத்திருக்கிறோம். இந்த படத்தற்கு மக்கள் கொடுத்த சப்போர்ட், அன்புக்கும், ஆதரவுக்கும் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதம் தொட்ட நன்றிகள்.
படம் எந்த ஊர்களில் ரிலீஸ் ஆகவில்லை என்று கமெண்டில் சொன்னீர்கள் என்றால் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்வோம். இதன்பிறகு ஒவ்வொரு ஊருக்கும் தியேட்டர் விசிட் வந்து உங்களுக்கு நன்றி சொல்ல போகிறேன். ரொம்ப ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.