/indian-express-tamil/media/media_files/2025/09/04/prakashraj-movue-2025-09-04-14-18-28.jpg)
இந்திய சினிமாவில் பல படங்களில் ஹீரோவுக்கு வில்லனாக நடித்து பலரையும் மிரள வைத்தவர் தான் பிரகாஷ்ராஜ். ஆனால் அவரையே ஒரு ரசிகை பொது இடத்தில் வைத்து ஆச்சரியம் கலந்த வகையில் மிரட்டியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1988-ம் ஆண்டு வெளியான மிதிலேயா சீதியாறு என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் தான் பிரகாஷ்ராஜ். இந்த படத்தில் ஒரு டாக்டர் கேரக்டரில் நடித்திருந்த இவர், அதன்பிறகு சில படங்களில் நடித்திருந்தார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான டூயட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து நிலா, பம்பாய், புள்ளக்குட்டிக்காரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் வெற்றியை பெற்றிருந்தாலும் பிரகாஷ்ராஜூக்கு பெயர் கொடுத்தது ஆசை படம் தான்.
1995-ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை திரைப்படம் அஜித்துக்கு மட்டும் இல்லாமல் அந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜூவுக்கும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் வில்லனாக நடித்திருந்த இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் இன்றுவரை பாராட்டுக்களை பெற்று தருகிறது.
2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்கடு என்ற படத்தின் ரீமேக்கான கில்லி படம், தமிழுக்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்யப்பட்டது. விஜய், த்ரிஷா இணைந்து நடித்த இந்த படத்தில் முத்துப்பாண்டி என்ற வில்லன் கேரக்டரில் நடித்தவர் தான் பிரகாஷ்ராஜ். இதில் அவர் பேசும் ஹாய் செல்லம் என்ற டைலாக், இன்றைக்கும் ரசிகர்கள் அவரை பார்த்தால், அந்த வார்த்தைதான் முதலில் சொல்வார்கள். அந்த அளவிற்கு பிரகாஷ்ராஜூக்கு கில்லி ஒரு முக்கிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.
இதனிடையே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ், கில்லி படம் பார்த்த ரசிகை ஒருவர் நடந்துகொண்ட விதம் குறித்து கூறியுள்ளார். நானும் எனது உதவியாளரும், ஏர்போர்ட்க்கு வெளியில் இருந்த ஹோட்டலில் சாப்பிட சென்றோம். அப்போது எனக்கு பக்கத்து டேபிளில் இருந்த பையன் அவரது அம்மாவிடம், அம்மா உங்க ஆளு என்று சொல்ல அந்த பெண் உடனே வீடியொ எடுக்க தொடங்கிவிட்டார். அம்மா நான் சாப்பிட்டு இருக்கேன் கொஞ்சம் ஃப்ரியா விடுறீங்களா என்று சொன்னேன்.
அந்த பெண்ணுக்கு 35-40 வயது இருக்கும். அவர் என்னை பார்த்து கோபமாக யோவ் கில்லி படம் பார்த்து உன்னை லவ் பண்ணேண்யா, ஆன இவனை கட்டிக்கிட்டேன். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் முன்னாடி வந்துக்கே போட்டோ எடுக்க கூடாதா என்று கேட்டார். அவர் பேசுவதை பார்த்து அருகில் இருந்த அனைவருக்கும் நான் வந்திருப்பது தெரிந்துவிட்டது. அதன்பிறகு அவரிடம் நீங்க எடுங்க என்று சொல்லிவிட்டேன். அந்த படம் பார்த்து அவ்வளவு நாள் வெயிட் பண்ணது உண்மையி் ஒரு மேஜிக் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.