/tamil-ie/media/media_files/uploads/2017/06/ajith-kumar759.jpg)
நடிகர் அஜித்
நடிகர் அஜித் நேற்று திடீரென உடல்நல்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அஜித் குமார் தனது அடுத்தக்கட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தனது மகன் ஆத்விக் பிறந்த நாளை கொண்டாடிய அஜித் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாதராண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அஜித் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது, அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், தற்போது அஜித் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சை முடிந்து அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அஜித் காதுக்கும் மூளைக்கும் இடையே சிறிய கட்டி இருந்ததாகவும், தற்போது இந்த கட்டி கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. தற்போது அஜித் சாராண வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர் கண்கானிப்பில் இருக்கிறார். இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.