இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில், நடிகர்கள் தங்களுக்கு டூப் வேண்டாம் என்று சொல்வதை பெரிய செய்தியாக பேசி வரும் நிலையில், க்ளாசிக் காலக்கட்டத்தில் தனக்கு டூப் வேண்டாம் என்று கூறி வெடிகுண்டில் குதித்துள்ளார் ஒரு காமெடி நடிகர் அவர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்திடம் உதவியாளராக இருந்தவர் தான் சந்திரபாபு. பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்ட இவருக்கு நடிகர் டி.ஆர்,மகாலிங்கம் தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கிறார். 1947-ம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்திரபாபுவுக்கு, 1951ம் ஆண்டு மோகன சுந்தரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னதுரை படத்தில், டி.ஜி.லிங்கப்பா இசையில், சந்திபாபு ஒரு பாடலை பாடியிருந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான். அதேபோல் முதல் வெஸ்டர்ன் பாடல்களை பாடியதும் அவர்தான். இப்படி பல திறமைகளை கையில் வைத்திருந்த சந்திரபாபு சில படங்களுக்கு கதையும் எழுதியள்ளார்.
மேலும் நடிப்புக்காக, எந்த எல்லைக்கும் செல்லும் ஆர்வம் கொண்ட சந்திரபாபு, காட்சிகளை படமாக்கும்போது இயக்குனர் சொல்லாத சில ஸ்டாண்ட்களையும் செய்து அசத்தக்கூடியவர், இவர் செய்த சில சொந்த காட்சிகள் அந்த படங்களின் இயங்குனர்களையே அலற வைத்துள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் ஒரு படத்தில் வெடிகுண்டில் குதித்துள்ளார் சந்திரபாபு. 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் பறக்கும் பாவை.
டி.ஆர்,ராமண்ணா இயக்கிய இந்த படத்தில் சந்திரபாபு சர்க்கஸ் கோமாளியாக நடித்திருப்பார். இந்த படத்தின் ஒரு காட்சியில், பீரங்கியில் இருந்து குண்டு வெடிக்கும்போது அதில் இருந்து கோமாளி வெளியில் வர வேண்டும். இந்த காட்சியை படமாக்கும்போது, சந்திரபாவுக்கு பதிலாக நிஜ கோமாளியை வரவழைத்து அந்த காட்சியில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத சந்திரபாபு, பீரங்கி உள்ளே நானே போகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் படக்குழு சந்திரபாபு முடிவுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இது வெடிகுண்டு. வெடித்தால் 50 அடி தூரம் மேலே போய் சம்மர்சால்ட் அடித்து வலையில் விழ வேண்டும் நிஜ கோமாளிக்கு டைமிங் தெரியும். அவன் பண்ணிடுவான் நீ எப்படி பண்ணுவ என்று கேடக், எனக்கு தெரியும் என்று சந்திரபாபு பிடிவாதமாக இருந்துள்ளார். ஆனாலும் இயக்குனர் முடியாது என்று சொல்ல, ஷாட் ரெடி என்று சொன்னதும் உண்மையான கோமாளியை உட்கார வைத்துவிட்டு சந்திரபாபு உள்ளே சென்றுள்ளார். அந்த காட்சியில் வெடிகுண்டு வெடித்து சந்திரபாபுவுக்கு அடிபட்டுள்ளது.
ரியாலிட் வர வேண்டும் என்பதற்காக சந்திரபாபு இந்த மாதிரியான முயற்சிகளை தனது பல படங்களில் மேற்கொண்டுள்ளார் என்று அவரது சகோதரர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“