பெயில் ஆன 'டெல்லி கணேஷ்' விமானப்படையில் சேர்ந்தது எப்படி? அவரே சொன்ன அனுபவம்!

தமிழ் மலையாளம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Delhi Ganesg

தமிழ் சினிமாவில் பலவிதமாக கேரக்டர்களில் நடித்து முத்திரை பதித்திருக்கும் நடிகர் டெல்லி கணேஷ், முன்னாள் விமானப்படை வீரர் என்பது பலருக்கும் தெரியாது. 10 வருடங்கள் இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ், தான் விமானப்படையில் சேர்ந்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

இந்திய விமானப்படையில் 10 வருடங்கள் பணியாற்றிய டெல்லி கணேஷ், அதன்பிறகு நாடகங்களில் நடிக்க தொடங்கினார். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல கேரக்டரில் நடித்து அசத்தியுள்ள டெல்லி கணேஷ், இயக்குனர் பாலச்சந்தர், விசு உள்ளிட்ட இயக்குனர்கள் இயக்கிய பெரும்பாலான படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக விசு இயக்கிய சிதம்பர ரகசியம் படத்தில் மெயின் வில்லனாக நடித்து அசத்தியவர் டெவல்லி கணேஷ்.

தமிழ் மலையாளம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். அதேபோல் டெப்பிங் கலைஞராகவும், சில நடிகருக்கு குரல் கொடுத்துள்ளார். இப்படி பல திறமைகளை உள்ளடக்கிய டெல்லி கணேஷ் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தான் விமானப்படையில் சேர்ந்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விமானப்படையில் ஆள் சேர்ப்பு என்ற ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் சேர வேண்டும் என்று நினைத்து வீட்டில் சொன்னபோது என் சித்தப்பா உள்ளிட்ட பலரும் விமானப்படை ரொம்ப கஷ்டம் டா. ரொம்ப இன்டலிஜெண்ட் ஆனவஙகளை தான் எடுப்பாங்க. உன்னை எடுக்க மாட்டாங்க என்று சொன்னார். ஆனாலும் நான் சலெக்னுக்கு போயிருந்தேன். வட இந்தியர்கள் தான் சலெக்டர்களாக இருந்தார்கள். சுமார் 200-க்கு அதிகமானோர் அங்கு இருந்தோம்.

Advertisment
Advertisements

இருந்த எல்லோம் ஜாலியாக பேசிக்கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். நான் இந்த வேலை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் இல்லை என்றால் மீண்டும் மதுரையா என்ற படப்புடன் இருந்தேன். அப்போது ஒரு ஆபீசர் என்னை அழைத்து பேசினார். பெயர் என்ன என்று கேட்டபோது, நான் கணேசன் என்று சொன்னேன். சிவாஜி கணேசனா ஜெமினி கணேசனா என்று கேட்டார். நான் ஆர்னரி கணேசன் என்று சொன்னேன். இதை கேட்ட அந்த ஆபீசர் மெட்ராஸில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஆர்னரி கணேசன் இருக்கிறார்களா என்று கேட்டுள்ளார்.

நான் பேசியதை பார்த்து என்னை லீடர் ஆக்கிவிட்டார். எல்லோரையும் வரிசையில் நிற்குமாறு சொல்ல சொன்னார். நானும் அவர்களிடம் சொன்னேன். அப்போதே என்னை செலக்ட் பண்ணிட்டார். ஆனால் கடைசி நாளில் இன்டர்வியூக்கு முன்பு ஒரு பையன் என்னிடம் வந்து உங்க பேருதானே கணேசன். நீங்க பெயில்னு போட்ருக்கு என்று சொன்னார். ஆனால் நான் விடவில்லை. அந்த ஆபீசர் தங்கிருக்கும் இடத்திற்கு கொட்டும் மழையில் சென்றேன்.

அவர் என்னை பார்த்துவிட்டு, அழைத்து பேசினார். நான் பெயில் என்ற விஷயத்தை கேட்டபோது அப்படி இல்லையே என்று சொல்லி, அமெரிக்க பிரசிடெட்ட் யார்? இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் யார்? உங்க அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டார். நான் பதில் சொன்னேன். ஓகே நாளைக்கு வா இன்டர்வியூக்கு வா என்று சொன்னார். 

அடுத்தநாள் போனபோது இன்டர்வியூவில் முந்தைய நாள் இரவில் கேட்ட அந்த 3 கேள்வியை மட்டும் தான் கேட்டார்கள். எல்லாம் முடிந்துவிட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று சொன்னார். ஆனால் கடைசிவரை நான் அவரை சந்திக்கவே இல்லை. 10 வருடங்கள் விமானப்படையில் வேலை பார்த்தேன் என்று டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: