Advertisment

3 மாதத்திற்கு முன்பு தனுஷுக்காக சந்தோஷப்பட்ட ஐஸ்வர்யா... அதற்குள் இப்படியா?

Tamil Cinema Update : தனுஷ் கடந்த சில மாதங்களாக தனது மனைவி ஐஸ்வர்யாவைக் குறித்து பதிவுகள் இல்லாமல், அவரது வேலையைச் சுற்றியே தனது சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

author-image
WebDesk
New Update
3 மாதத்திற்கு முன்பு தனுஷுக்காக சந்தோஷப்பட்ட ஐஸ்வர்யா... அதற்குள் இப்படியா?

Tamil Cinema Update For Dhanush And Aishwarya : தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி தற்போது பிரிவதாக அறிவித்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவின் முந்தைய ட்விட்கள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், 18 வருடங்களுக்கு இருவரும் தங்கள் இல்லற வாழ்வில் இருந்து பிரிவதாக தங்களது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்புபவர்களாகவும் பயணம் வளர்ச்சி, புரிதல், சரிசெய்தல் மற்றும் மாற்றியமைத்தல் என 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். இன்று நாம் நமது பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக தனுஷ் குறித்து ஐஸ்வர்யா ஒரு ட்விட் செய்த 3 மாதத்திற்குள் இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம், தனுஷ் மற்றும் ஐஸ்வாயாவின் அப்பா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் டெல்லியில், நடந்த மதிப்புமிக்க தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ஒன்றாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நிலையில், அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

இது தொடர்பாக அக்டோபர் 25 அன்று, ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் இருவரின் படத்தைப் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த பதிவில், "அவர்கள் என்னுடையவர்கள் ... இது வரலாறு பெருமைபடும் மகள் பெருமைபடும் மனைவி என்ற என்ற பெயர் கொண்டவள்," என்று தலைப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தனுஷ் மட்டும் இம்பெற்ற ஐஸ்வர்யாவின் கடைசி பதிவு கடந்த ஏப்ரல் 2021-அன்று பதிவிடப்பட்டுள்ளது. மறுபக்கம், தனுஷ் கடந்த சில மாதங்களாக தனது மனைவி ஐஸ்வர்யாவைக் குறித்து பதிவுகள் இல்லாமல், அவரது வேலையைச் சுற்றியே தனது சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 இல் திருமணம் செய்து கொண்டனர். இதில், 2006 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் இரு ஆண்குழந்தைகள் பிறந்தது. இதில் முதல் மகனுக்கு யாத்ரா என்றும் 2-வது மகனுக்கு லிங்கா என்று பெயரிட்டுள்ளனர். மேலும் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 திரைப்படம் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய இரு படங்களை ஐஸ்வர்யா இயக்கியுள்ளார்.

இதற்கிடையில், தனுஷ் கடைசியாக 2021 டிசம்பரில் வெளியான அட்ராங்கி ரே படத்தில் நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். கடந்த பொங்கல் தினத்தில் இந்த படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment