Tamil Cinema Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், 18 வருடங்களுக்கு இருவரும் தங்கள் இல்லற வாழ்வில் இருந்து பிரிவதாக தங்களது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், பல்வேறு கேலி கிண்டல்களுக்கு மத்தியில் முன்னணி நாயகனாக உயர்ந்து நிற்பவர் தனுஷ், கடந்த 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதே இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து காதல்கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், பட்டாஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்திப்பு
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் சந்திப்பு காதல்கொண்டேன் படத்தில் இருந்து தொடங்கியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப் பார்க்க ஐஸ்வர்யா சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்குச் சென்றபோது அவர்களின் காதல் கதை தொடங்கியது. இந்த படத்தில் தனுஷின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட ஐஸ்வர்யா, படத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், தனுஷ்க்கு மலர்களை அனுப்பியுள்ளார். இதை பார்த்த நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை நேரில் அழைத்து நன்றி தெரிவித்துள்ளார். அங்கிருந்து இவர்களின் நட்பு தொடங்கியுள்ளது.
இவர்களின் காதல் கதை எப்படி தொடங்கியது?
நட்பு ரீதியாக தொடங்கிய இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பிறகு, 2004 இல் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டனர். காலப்போக்கில் இவர்களின் அன்புக்கு அடையாளமாக கடந்த 2006-ம் ஆண்டு யாத்ரா என்ற மகனும், 2010-ம் ஆண்டு லிங்கா என்று மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தாரா தனுஷ்?
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் படமான 3 படத்தில், தனுஷ் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இவருக்கும் உண்டான நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்தது. இதனால் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனுக்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இது குறித்து ஐஸ்வர்யா பொதுவெளியில் எதுவும் பேசவில்லை.
இதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு முன்னணி நடிகையாக த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் நிச்சியத்தார்த்தம் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்த சில நாட்களில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தனுஷ்தான் என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தது. தனுஷூடன் நல்ல உறவை தொடர்ந்து வரும் த்ரிஷா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil