/indian-express-tamil/media/media_files/2025/06/20/dhanush-kubera-2025-06-20-15-55-28.jpg)
வாத்தி படத்திற்கு பிறகு, தனுஷ் சேகர் கமுலா கூட்டணியில் வெளியாகியுள்ள படம் குபேரா. நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கிறது என்பதை பார்போமா?
மத்திய அரசின் எரிவாயு திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக, முயற்சி செய்யும் தொழில் அதிபர் ஜிம் சர்ப், அதற்காக, முன்னாள் சி.பி.ஐ அதிகாரியான நாகர்ஜூனாவின் உதவியுடன் ரூ1 லட்சம் கோடி பணத்தை சட்டவிரோதமாக கைமாற்ற முயற்சிக்கிறார். இந்த முயற்சியில், கல்வி அறிவு இல்லாத பிச்சைக்காரர்களாக இருக்கும், 4 பேரை தேர்வு செய்து அவர்கள் மூலமாக பரிவர்த்தனை செய்ய நாகர்ஜூனா முடிவு செய்கிறார்,
இந்த பணப்பரிவர்த்தனை முடிந்தவுடன், அனைவரும் கொலை செய்யப்படுகின்றனர். அந்த வகையில் பிச்சைக்காரர்களில் ஒருவராக வரும் தனுஷ், வேலை முடிந்து கொலை செய்ய முயற்சிக்கும்போது தப்பி விடுகிறார். அவரை பிடித்தால் தான் இந்த பரிவர்த்தனை சரியாக முடியும் என்பதால் நாகர்ஜூனா தனது ஆட்களுடன், தனூஷ தேடி அலைகிறார். அவர்களிடம் இருந்து தப்பிச்செல்லும் தனுஷ் இடையில் ராஷ்மிகாவை சந்திக்கிறார்.
அப்போது இவருவருக்கும் ஏற்படும் பழக்கத்தின் காரணமாக இருவரும் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன்பிறகு என்ன நடந்தது? ராஷ்மிகா யார்? தனுஷ் நாகர்ஜூனா கும்பலிடம் மாட்டினாரா இறுதியில் என்ன நடந்துத என்பது தான் குபேரா படத்தின் மீதிக்கதை. படத்தில் பிச்சைக்காரனாக நடித்துள்ள தனுஷ் தான் ஒரு கைதேர்ந்த நடிகன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அழுக்கு படிந்த முகத்துடன் ஒரு நாயுடன் தனுஷ் பிச்சைக்காரனாக வாழ்ந்துள்ளார்.
அதேபோல் ஒரு சூழ்நிலை காரணமாக தனுஷுடன் பயணிக்கும் ராஷ்மிகா இதுவரை தான் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தனுசுடன் சேர்ந்து குப்பை மேட்டில் சுற்றித்திரியும் ராஷ்மிகா, ரசிகர்களுக்கு தன்னை வேறு கோணத்தில் பிரதிபலித்துள்ளார். அதேபோல் தான் ஏற்றுக்கொண்ட கேரக்டரை அசால்ட்டாக செய்துள்ள நாகர்ஜுனா, சூழ்நிலைக்காக கொள்ளை கும்பலுடன் கைகோர்க்கும் கேரக்டராக யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில காட்சிகளில் அவர்கள் கண்களால் பேசும் இடங்களில் பாராட்டுக்களை அள்ளுகிறார்.
தொழிலதிபர் கேரக்டரில் நடித்துள்ள ஜிம் சர்ப் தனது வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். பிச்சைக்காரராக வரும் பாக்கியராஜ், சுனைனா, நாசர், தலிப் தஹில் என அனைவருமே ஏற்றுக்கொண்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு, தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான கதையில் தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் லாஜிக் மீறல்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.