நயன்தாரா அறிக்கை விவகாரம்: தனுஷ் பதில் அளிப்பார்; வழக்கறிஞர் விளக்கம்!

தன்னை பற்றி நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தனுஷ் விரைவில் பதில் அளிப்பார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

தன்னை பற்றி நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தனுஷ் விரைவில் பதில் அளிப்பார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
nayanthara Dhnauhsa

நடிகர் தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து தனுஷ் விரைவில் பதில் அளிப்பார் என்று அவரது வழக்கறிஞர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், இயக்குனர், நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். தயாரிப்பாளராக கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் என்ற படத்தை தனுஷ தயாரித்திருந்தார். நயன்தாரா விஜய் சேதுபதி இணைந்து நடித்த இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அதன்பிறகு தனுஷ் நயன்தாரா இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதேபோல், நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது, நயன்தாராவுடன் காதல்வயப்பட்ட விக்னேஷ் சிவன், படத்தின் பட்ஜெட்டை பன்மடங்கு உயர்த்திவிட்டதாகவும் இதனால் தனுஷ் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனாலும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களின் திருமண வீடியோ நெட்ஃபிளக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு ரூ10 கோடி உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் என்று தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும், தனுஷ் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். மேலும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "வாழு, வாழ விடு - இவையெல்லாம் நம்பும் தீவிர ரசிகர்களுக்காக... மனிதர்கள் மற்றவர்களுக்காக மாற்றமடைவதற்கும், மற்றவர்களின் சந்தோஷத்தில் இருந்து மகிழ்ச்சியை பெறுவதற்கும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

இந்த அறிக்கை வெளியானதில் இருந்து தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து தனுஷ் தரப்பில் இருந்து எவ்வித பதில் அறிக்கையும் வரவில்லை. அதே சமயம் தனுஷ் விரைவில் நயன்தாராவின் அறிக்கைகளுக்கு விரைவில் பதில் அளிப்பார் என்று அவரது வழக்கறிஞர் அருண் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்டாண்ட் வித் தனுஷ் என்று இணையத்தில் ஹெஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dhanush Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: