தாலி, பட்டுப்புடவை, 2 கார்; 10 பேருக்கு சாப்பாடு, கல்யாண செலவு இவ்வளவு தான்: மனம் திறந்த ராஜகுமாரன்!

ராஜகுமாரன் தேவயானியுடன் திருமணம், மற்றும் அவருடனான வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பது குறித்து பேசியுள்ளார்.

ராஜகுமாரன் தேவயானியுடன் திருமணம், மற்றும் அவருடனான வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பது குறித்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil Cinema Devayani rajakumaran

தமிழ் சினிமாவில் தேவயானி முன்னணி நடிகையாக இருக்கும்போது அவரை திருமணம் செய்துகொணட இயக்குனர் ராஜகுமாரன், தங்கள் திருமணம் எப்படி நடந்தது? அதன்பிறகு வாழ்க்கை பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித:த ஒரு பேட்டியிவ் கூறியுள்ளார்.

Advertisment

1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவயானி. தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், பெங்காலி, படத்தில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு பிரஷாந்த் – அஜித் இணைந்து நடித்த கல்லூரி வாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

காதல்கோட்டை, நினைத்தேன் வந்தாய், ப்ரண்ட்ஸ், நீ வருவாய் என, வல்லரசு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் தேவயானி நடித்திருக்கிறார். கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான காதலுடன் என்ற படத்தில் நாயகியாக நடித்த தேவயானி, அதன்பிறகு படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். 1999-ம் ஆண்டு தான் இயக்கிய நீ வருவாய் என படம் உட்பட தான் இயக்கிய 4 படங்களிலும் தேவயைானியை நாயகியாக நடிக்க வைத்தவர் இயக்குனர் ராஜகுமாரன்.

படப்பிடிப்பில் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து, கடந்த 2001-ம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தேவயானி தற்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய, ராஜகுமாரன் தேவயானியுடன் திருமணம், மற்றும் அவருடனான வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பது குறித்து பேசியுள்ளார்.

Advertisment
Advertisements

அதில் எனக்கு செலவே இல்லை. நான் சிங்கில் ரூமில் இருக்கும்போது மாதம் எனக்கு ரூ1000 தான் செலவு. மேல் மாடியில் இருப்பவரிடம் மாதம் ரூ500 கொடுத்தால் காலை, இரவு சாப்பாடு கொடுத்துவிடுவார்கள். மதியம் படப்பிடிப்பில் சாப்பிட்டுக்கொள்வேன். நீ வருவாய் என படத்தின்போது கொடுத்த கடைசி சம்பளம் ரூ50000, விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ1 லட்சம் அட்வான்ஸ் பணம் என, வீட்டு ஓனரிடம் கொடுத்து வைத்திருந்தேன். அவர் பேங்கில் போட்டு வைத்திருந்தார். அதில் 2 லட்சம் இருந்தது. அதை வைத்து கல்யாணம் நடந்தினோம்.

வீட்டில் இருந்து தேவயானி ஒரு ட்ரெஸ் கூட எடுத்து வரவில்லை. அவருக்கு தேவையான ட்ரெஸ் எடுத்தோம். கல்யாணத்திற்கு அரை பவுன் தாலியுடன் ரூ12000 செலவு ஆனது. திருத்தணியில் கல்யாணம். ரெண்டு வார் வைத்தோம். 10 பேருக்கு சாப்பாடு கொடுத்தோம். பட்டு வேட்டி, பட்டுப்புடவை என அனைத்துமே இந்த செலவில் முடிந்தது. கல்யாண பட்டுப்புடவை தேவயானி இன்னும் வைத்திருக்கிறார். கல்யாண நாள் அன்று கட்டிக்கொள்வார். அவ்வளவு சிக்கனமாக இருந்தோம். அதன்பிறகு கார் ஒன்று வாங்கினோம் இப்படித்தான் எங்கள் வாழ்க்கை ஆரம்பம் ஆனது என கூறியுள்ளார்.

tamil cinema actress Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: