/indian-express-tamil/media/media_files/2024/11/27/xjWvJOisWzCK76J7xf3V.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ஜோதிகாவுக்கு நடிகை நக்மா அக்கா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அவருக்கு மற்றொரு அக்காவும் இருக்கிறார். அவர் தமிழ் சினிமாவில் 2 படங்களில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா. தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகா, மலையாளம் மற்றும் இந்தியில் நடித்து வருகிறார். தற்போது தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்ட ஜோதிகா, தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கயைில் ஜோதிகாவுக்கு நடிகை நக்மா சகோதரி என்று அனைவருக்கும் தெரியும்.
அதே சமயம் நக்மா ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி அல்ல. அவர் ஜோதிகாவின் ஒன்றுவிட்ட சகோதரி. ஆனால் ஜோதிகாவுக்கு உடன்பிறந்த அக்கா ஒருவர் இருக்கிறார். 1997-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான சிஷ்யா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரோஷ்னி. இவர் தான் நடிகை ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி. சிஷ்யா படத்திற்கு பிறகு மாஸ்டர் என்று தெலுங்கு படத்திலும், குலாபி என்ற கன்னட படத்திலும் ரோஷ்னி நடித்திருந்தார்.
கடைசியாக அருண் விஜய் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான துள்ளி திரிந்த காலம் என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் பாலகிருஷ்ணா, ஸ்ரீகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ரோஷ்னி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.