Advertisment

தொழில் மீதான மரியாதைக்கு உதாரணம் இவர்: சிவகுமார் 82-வது பிறந்த நாள்; கமல்ஹாசன் வாழ்த்து

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மற்றும் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியுள்ள சிவக்குமார் கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு பூவெல்லம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்திருந்தார்

author-image
WebDesk
New Update
Kamal Haasan Sivakumar

பழம்பெரும் நடிகர் சிவக்குமார் - கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான சிவக்குமார் இன்று தனது 82-வது பிறந்த நாளை கொண்டடி வரும் நிலையில், அவருக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

1941-ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்தவர் பழனிச்சாமி. 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தில் சிவக்குமார் என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் கடவுள் அவதாரத்தில் நடித்த சிவக்குமார் பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ரோசாப்பூ ரவிக்கைகாரி, அன்னக்கிளி உள்ளிட்ட பல படங்கள் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக உள்ளன.

மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மற்றும் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியுள்ள சிவக்குமார் கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு பூவெல்லம் கேட்டுப்பார் என்ற படத்தின் தனது மகன் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த சிவக்குமார் அதன்பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சூர்யா கார்த்தி முன்னணி நடிகர்களாக வளர்ந்துவிட்ட நிலையில், சிவக்குமார் நடிப்பில் இருந்து விலகினார்.

தற்போது தனக்கு பிடித்த ஓவியம் வரைவது புத்தகம் எழுதுவது உள்ளிட்ட செயல்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சிவக்குமார் இன்று தனது 82-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதள பக்கத்தில் சிவக்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமாருடன் இருக்கும் பழைய படத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க! என்ற பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனும், சிவகுமாரும் இணைந்து 'குமஸ்தாவின் மகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'குறத்தி மகன்', 'அன்னை வேளாங்கண்ணி', 'தேன் சிந்துதே வானம்', 'மேல்நாட்டு மருமகள்' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கமல்ஹாசன் தற்போது தனது 'கல்கி கி.பி. 2898' படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். விரைவில் அவரின் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது. மேலும் அடுத்து மணிரத்னம் மற்றும் எச்.வினோத் ஆகிய இயக்குனர்களில் படங்களில் நடிக்க உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Actor Sivakumar Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment