/indian-express-tamil/media/media_files/pov6eU6YSTVXpE7rwXeX.jpg)
கமல்ஹாசன் - விஷால் - கார்த்தி - பூச்சி முருகன்
புதிதாக கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்காக பணிகளுக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ரூ1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம், கட்டும் பணிகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட அளவு பணிகள் முடிந்தபின், போதிய நிதி இல்லாத காரணத்தினால் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், தலைவர் நாசர் மற்றும் பொதுச்செயலாளர் விஷால் தலைமையிலான புதிய அணி, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் 40 கோடி தேவை என்று கூறியது.
மேலும் இந்த தொகையை வங்கியில் கடன் வாங்கி நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டது. இதனிடையே தற்போது நிதி பற்றாக்குறையை சமாளிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரிடம் நடிகர் சங்கம் சார்பில் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, நடிகரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்திற்கு ரூ1 கோடி நிதியுதவி அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைருமான கமல்ஹாசன் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூ1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் சங்க கட்டிட்டம் கட்டுவதற்காக வைப்பு நிதிக்காக ரூ1 கோடிக்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் வழங்க, விஷால் பூச்சி முருகன் நடிகர் கார்த்தி ஆகியோர் காசோலையை பெற்றுக்கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.