தீ இவன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அப்படத்தின் இயக்குனர் ஜெயமுருகன் கண்கலங்கிய நிலையில், அவருக்கு நடிகை சன்னி லியோன் ஆறுதல் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று பெயரெடுத்தவர் நடிகர் கார்த்திக். பல வெள்ளி விழா படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது கேரக்டர் நடிகராக மாற்றியுள்ளார். அந்த வகையில் இவர் வில்லனாக நடித்த அனேகன், போலீசாக நடித்த புலிவேஷம், அப்பாவாக நடித்த மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் பிரஷாந்துடன் இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அந்தகன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இயக்குனர் ஜெயமுருகன் இயக்கத்தில் தீ இவன் என்ற படத்தில் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுகன்யா, சிங்கம்புலி, அபிதா ஜான் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தீ இவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில நடிகை சன்னி லியோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சன்னி லியோன் தமிழ் படங்களில் நடிப்பது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
அதன்பிறகு பேசிய தீ இவன் படத்தின் இயக்குனர் ஜெயமுருகன், இந்த படத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணம் எனது மனைவிதான். அவரை நான் அம்மா போன்று பார்த்துக்கொள்கிறேன். அவர் என்னை மகனாக பார்த்துக்கொள்கிறார் என்று கூறி கண்கலங்கியபடி மைக்கை அருகில் இருப்பவரிடம் கொடுத்துவிட்டார்.
இயக்குனர் கண்கலங்குவதை பார்த்த சன்னி லியோன் அவரது தோல்மீது ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.