முதல் மனைவி பக்கம் திருப்பாத ரங்கராஜ்; 2-வது மனைவிக்கு வைத்த பெரிய செக்: கவனம் ஈர்க்கும் லேட்டஸ்ட் போஸ்ட்!

சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றிருந்த மாதம்பட்டி ரங்கராஜ், இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றிருந்த மாதம்பட்டி ரங்கராஜ், இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

author-image
WebDesk
New Update
Madhampatti

சமீபத்தில் 2-வது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது காஸ்டியூம் டிசைனரை மாற்றிவிட்டதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் பிரபல சமையல் கலைஞராக வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்தியாவில் பிரபலங்களில் வீடுகளில் சமையல் நிகழ்ச்சி என்றால் அங்கு சமையல் இவருடையகத்தான் இருக்கும். சினிமா, அரசியல் பிரபலங்கள் என பலரின் வீட்டு விசேஷங்களுக்கு சமைத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் என 2 படங்களில் நடித்துள்ளார். அடுத்து 3-வது படத்திற்கான பூஜை தொடங்கியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், தனது காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிறிசில்டாவை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. மேலும், இந்த திருமணம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிறிசில்டா தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

அதே சமயம், ஆடி மாதத்தில் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. இந்த திருமணம் முன்பே நடந்துள்ளது. ஆனால் போட்டோவை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். ஆனால் இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஜாய் கிறிசில்டா தொடர்ந்து ஒரு சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் கூட, தனக்கும் ரங்கராஜ்க்கும் பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

இதனிடையே, சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றிருந்த மாதம்பட்டி ரங்கராஜ், இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது குறித்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது காஸ்டியூம் டிசைனரை மாற்றியுள்ளதாக ஒரு அறிப்பை வெளியிட்டு தனது 2-வது மனைவிக்கு செக் வைத்துள்ளார்.

ஏற்கனவே ஜாய் கிறிசில்டா தான் மாதம்பட்டி ரங்கராஜூவின் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவரை மாற்றிவிட்டு, மீனாட்சி ஸ்ரீதரன் என்பவரை தனது காஸ்டியூம் டிசைனராக நியமித்துள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், வெறும் சமையல்காரர் அல்ல - ஒரு கூற்று. ஒவ்வொரு மடிப்பும், ஒவ்வொரு பட்டனும், ஒவ்வொரு அசைவும் துல்லியத்தைப் பேசுகின்றன, ஆர்வத்தை ஊட்டுகின்றன, மேலும் உருவாக்க நெருப்பால் எரிகின்றன என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Cinema News tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: