தன்னை கடுமையாக விமர்சித்து பல கட்டுரைகளை எழுதிய கண்ணதாசனை தனது ஆட்சியில் அரசவை கவிஞராக அமர்த்தியவர் எம்.ஜி.ஆர். ஆனால் இந்த நிகழ்வுக்கு பின்னால் பல சர்ச்சைகள் இருந்தது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவியில் இருந்தவர் தான் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில் சொந்தப்படம் எடுத்து வெற்றி கண்ட நிலையில், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தார்.
தி.மு.கவில் இருந்த எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் தலைவராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு வெற்றியும் கண்டார். இதன் மூலம் தனது மரணத்திற்கு முன்புவரை தமிழ்நாட்டு அரசியலில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், பல நலத்திட்டங்களை கொடுத்துள்ளார். '
அதேபோல் சினிமாவில் தனக்கு நெருங்கிய நண்பராக இருந்து ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டு பிரிந்த கண்ணதாசன், தன்னை கடுமையாக விமர்சித்து பல அறிக்கைகயை வெளியிட்டிருந்தாலும், அவரை அரசவை கவிஞராக பணியமர்த்தி அழகு பார்த்தவர் தான் எம்.ஜி.ஆர். தன்னை விமர்சித்ததால் அதனை சரிக்கட்ட கண்ணதாசனுக்கு வாய்ப்பு கொடுக்கிறார் எம்.ஜி.ஆர் என்ற விமர்சனங்கள் எழுந்தது.
எந்த விமர்சனங்கள் இருந்தாலும், அதில் இருந்து மாறாத எம்.ஜி.ஆர் கண்ணதாசன் அந்த பதவியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். தான் இறக்கும் வரை கண்ணதாசன் இந்த பதவியில் இருந்தார். ஒரு கட்டத்தில் கண்ணதாசன், அரசவை கவிஞராக இருந்து அமெரிக்காமல் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது பதவி, கவிஞர் புலமை பித்தனுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு முத்துலிங்கம் போன்ற சில கவிஞர்கள் அந்த பதவியில் இருந்தனர்.
அதன்பிறகு கலைஞர் மு.கருணாநிதிக்கு இந்த பதவி கொடுக்கப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் அப்போது அவர் முதல்வராக இருந்ததால், முத்தமிழ் அறிஞராகவும், முதல்வராகவும் இருக்கும் கருணாநிதியே அரசவை கவிஞராக எப்படி இருக்க முடியும் என்ற விமர்சனமும் வந்திருக்கலாம். அதேபோல் நானே கவிஞராக இருக்கும்போது வேறொருவரை எப்படி அரசவை கவிஞராக நியமிக்க முடியும் என்று கருணாநிதி அவர்களே நினைத்திருக்கலாம்.
அதன் காரணமாக இந்த பதிவிக்கு இன்று வேறு யாரும் நியமிக்கப்படாமல் உள்ளனர். அதே சமயம் தற்போது வைரமுத்து போன்று தமிழ் பற்றாளர்கள், தமிழை நன்கு அறிந்த பலர் இருக்கிறார்கள். தமிழ் மொழியை தூக்கிப்பிடிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசவை கவிஞரை நியமிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது என்று இயக்குனர் ராசி அழகப்பன் ஓஎச் சினிமா யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“