நல்லவங்க தான் பாடணும், நீங்க வில்லன் பாட கூடாது; பாட்டு பாட வாய்ப்பு கேட்ட எம்.ஆர்.ராதாவுக்கு இயக்குனர் வைத்த செக்

தமிழ் சினிமாவில் நடிகவேல் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகவேல் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MR Radha Song

நல்ல உள்ளம் கொண்டவர் தான் இந்த பாடலை பாட வேண்டும் நீங்கள் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளீர்கள். அதனால நீங்கள் பாட முடியாது என்று பாடல் பாட வாய்ப்பு கேட்ட எம்.ஆர்,ராதாவுக்கு சமாதானம் கூறியுள்ளார் இயக்குனர் பிம்சிங்.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பல்கலைகழகமாக இருந்தவர் தான் சிவாஜி கணேசன். ஆனால் அவருக்கே பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. தமிழ் சினிமாவில் நடிகவேல் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றும் ஒரு முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.

நாடக உலகில் கொடிகட்டி பறந்த எம்.ஆர்.ராதா அதன்பிறகு சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.  ஆனாலும் நாடகத்தை கைவிடாத அவர்,  நலிவடைந்துள்ள நாடக கம்பெனிகளை தூக்கி நிறுத்தும் வகையில் அவர்களின் நாடகளிலும் நடித்து வந்துள்ளார்.அப்படி நாடகங்களில் நடிக்கும்போது தான் சிவாஜிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராக உயர்ந்துள்ளார். அந்த வகையில், சிவாஜி கணேசன் நடித்த பாவ மன்னிப்பு படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் எம்.ஆர்.ராதா.

இந்த படத்தின் பாடல் கம்போசிங் நடைபெறும்போது, எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடல் ரெக்கார்டிங் நடந்துள்ளது. நாகூர் ஹனிபா பாடியிருந்தார். எம்.ஆர்.ராதா ஷூட்டிங் வந்த எம்.ஆர்.ராதா தூரத்தில் இருந்து இந்த பாடலை கேட்க, அங்கே வந்த எம்.எஸ்.வியிடம் இந்த பாடல் வித்தியாசமாக இருக்கு எனக்கு பாட வாய்ப்பு கொடுக்க கூடாதா? எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள். நாடகங்களில் நான் பாடலும் பாடி இருக்கிறேன். இந்த பாடல் வாய்ப்பை எனக்கு கொடுக்காமல், வேறு யாருக்கோ கொடுத்துவிட்டீர்களே என்று கேட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இதை கேட்ட எம்.எஸ்.வி, இது நான் எடுத்த முடிவு இல்லை. இயக்குனர் பீம்சிங் எடுத்த முடிவு. அவரிடம் போய் கேளுங்கள் என்று சொல்ல, எம்.ஆர்.ராதா பீம்சிங்கை சந்தித்தபோது, இது நல்ல உள்ளம் கொண்டவர் பாடும் பாடல். நீங்கள் இதில் வில்லன் அதனால் உங்களுக்கு செட் ஆகாது. உங்களுக்கு வேறு பாடல் தருகிறேன் என்று கூறி சமாதானம் செய்துள்ளார். இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: