Advertisment

சரியில்லாத நடிப்பு... இயக்குனர் சொன்ன குறை : மீண்டும் படமாக்க செலவை ஏற்றுக்கொண்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கிய உதாரணம் என்று சொன்னால் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஆனால் அவருக்கே பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா.

author-image
WebDesk
New Update
M R Radha Classic

எம்.ஆர்.ராதா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனது நடிப்பு சரியாக இல்லை என்று இயக்குனர் வருத்தப்பட்டதால்,  அந்த காட்சிக்கான படப்பிடிப்பை மீண்டும் நடந்த சொன்ன, எம்.ஆர்.ராதா அந்த படப்பிடிப்புக்காக மொத்த செலவையும் தானே ஏற்றுக்கொண்டார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கிய உதாரணம் என்று சொன்னால் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஆனால் அவருக்கே பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. நாடக உலகில் கொடிகட்டி பறந்த எம்.ஆர்.ராதா அதன்பிறகு சினிமாவில் நடிக்க வந்தார். சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தபோதும், நலிவடைந்துள்ள நாடக கம்பெனிகளை தூக்கி நிறுத்தும் வகையில் அவர்களின் நாடகளிலும் நடித்து வந்துள்ளார்.

அப்படி நாடகங்களில் நடிக்கும்போது தான் சிவாஜிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராக உயர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகவேல் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றும் ஒரு முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தனது படத்தின் காட்சிகள் சரியாக வர வேண்டும் என்பதற்காக எவ்வளவு மெனக்கெடவும் செய்வார் எம்.ஆர்,ராதா.

அந்த வகையில் 1960-ம் ஆண்டு கைராசி என்ற படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஜெமினி கணேசன், சரோஜா தேவி ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் எம்.ஆர்.ராதா நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பல படங்களில் பிஸியாக நடித்து வந்த எம்.ஆர்.ராதா காலை 9 மணிக்கு தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு, அதன்படி சரியான 9 மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனிடையே இந்த படத்தின் ஒரு காட்சியில், எம்.ஆர்.ராதா நடித்தபோது, அது இயக்குனர் கே.சங்கருக்கு திருப்திகரமாக இல்லை. இதனால் ஒன்மோர் என்று சொல்ல, அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. அப்போதும் இயக்குனர் சங்கருக்கு காட்சியில் திருப்தி இல்லை. ஆனாலும் எம்.ஆர்.ராதா பெரிய நடிகர் என்பதால் ஓ.கே என்று சொல்லிவிட்டார். இது குறித்து எம்.ஆர்,ராதாவின் மேக்கப் மேன் கஜபதியிடம், சொன்ன இயக்குனர் ஷங்கர் அண்ணன் இன்னைக்கு சிறப்பாக நடித்திருக்கலாம். ஏனோ இப்படி நடித்துவிட்டார். அவரும் என்ன செய்வார் பிஸியாக நடிக்கிறாரே என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட மேக்கப் மேன் கஜபதி, எம்.ஆர்.ராதாவிடம் சொல்ல, அவர் உடனடியாக இயக்குனர் சங்கர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தயாரிப்பாளர் வாசு மேனனும் இருக்க, ஏப்பா சங்கர் நான் நடித்த காட்சி உனக்கு திருப்தியா இல்லையாமே என்று கேட்க, சங்கர் தயங்கியுள்ளார். சரி அதை விடு இன்னைக்கு சாய்ங்காலம் 6 மணிக்கு அந்த காட்சியை மீண்டும் படப்பிடிப்பு நடத்துங்கள் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல, 6 மணிக்கு படப்பிடிப்பு வைங்க என்று சொல்லிவிட்டு எம்.ஆர்,ராதா புறப்பட்டுள்ளார்.

அதன்படி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்தமுறை எம்.ஆர்.ராதா கே.சங்கர் எதிர்பார்த்ததை விட பல மடங்கு சிறப்பாக நடித்து அசத்தினார். காட்சியும் சிறப்பாக வந்துள்ளது என்று இயக்குனர் சொல்ல, அந்த படப்பிடிப்புக்கு ஆன செலவை, தயாரிப்பாளர் வாங்கவில்லை என்றாலும் அவர் கையில் வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார் எம்.ஆர்,ராதா. இந்த தகவலை பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

M R Radha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment