/indian-express-tamil/media/media_files/2025/09/08/muruga-ashol-2025-09-08-20-52-45.jpg)
மஞ்சுவிரட்டு தொடர்பான திரைக்கதை அமைத்து படமாக்கப்பட்டு வரும், வட மஞ்சுவிரட்டு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் அசோக், காளையுடன் படப்பிடிப்பு நடந்ததபோது, காளை சீறி பாய்ந்ததில் காயமடைந்துள்ளார்.
1993-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணா என்ற இந்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அசோக் குமார் பாலகிருஷ்ணன். 2007-ம் ஆண்டு தமிழில் முருகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஓரளவு வெற்றியை பெற்றது. அதன்பிறகு முருகா அசோக் என்று அழைக்கப்பட்ட இவர், பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை, பெஸ்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் இவர் தற்போது வட மஞ்சுவிரட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை சங்கிலி என்பவர் எழுதி இயக்கி வரும் நிலையி்ல, அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி தயாரிக்கிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அஞ்சுகுளிப்பட்டி என்கிற கிராமப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், சமீபத்தில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில், அசோக் காளையுடன் பழக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது, அப்போது காளை எதிர்பாராத வகையில் சீறி பாய்ந்ததில், அசோக் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதன் கரெணமாக அவருக்கு வயற்றுலிருந்து மார்பு வரை கிழித்து காயம் ஏற்பட்டது. இதனால் அந்தப் படப்பிடிப்பிலிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், சிகிச்சைக்கு அடுத்த நாளே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இந்த விபத்து தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.