எங்க அண்ணன் போயட்டாரு, இனி எனக்கு யாரு இருக்கா? சிவாஜி வீட்டில் மூலையில் படுத்து கிடந்த நாகேஷ்!

படத்தை பார்த்த சிவாஜி, அதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தபோது, நாம் ஓவராக நடித்துவிட்டோம். கட் செய்துவிட போகிறார் என்று நாகேஷ் பயந்துள்ளார். ஆனால் சிவாஜி அப்படி செய்யவில்லை.

படத்தை பார்த்த சிவாஜி, அதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தபோது, நாம் ஓவராக நடித்துவிட்டோம். கட் செய்துவிட போகிறார் என்று நாகேஷ் பயந்துள்ளார். ஆனால் சிவாஜி அப்படி செய்யவில்லை.

author-image
WebDesk
New Update
nagesh

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர்களில் முக்கியமானவர் நாகேஷ். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என மூத்த நடிகர்கள் தொடங்கி, சிம்பு வரை உள்ள இளம் நடிகர்கள் வரை பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், சிவாஜி இறந்தபோது, அவர் வீட்டின் மூலையில் படுத்து கிடந்ததாக கூறியுள்ளார்

Advertisment

கடந்த 1965-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் திருவிளையாடல். சிவாஜி சாவித்ரி இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் தருமி வேடத்தில் நாகேஷ் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்தில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்த நாகேஷ் இந்த படத்திற்காக ஒன்றரை நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

அப்படி அவர் படப்பிடிப்புக்கு வந்தபோது மதியம் வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக செல்ல வேண்டி இருந்துள்ளர். இதனால் சிவாஜி மேக்கப் போட்டு வர லேட் ஆகும் என்பதால் இவர் தொடர்பான காட்சிகளை மட்டும் படமாக்கிக்கொள்ள இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அனுமதி கொடுத்துள்ளார். அதன்படி நாகேஷ் தனியாக வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டது. அப்போது நாகேஷ் நீ எப்படி வேண்டுமானாலும் நடி ஆனால் எனது வசனத்தை மட்டும் மாற்றிவிடாதே என்று இயக்குனர் கூறியுள்ளார்.

தனியாக வரும் காட்சிகளில் பிரமாதமாக நடித்திருந்த நாகேஷ் சிவாஜியுடனான காட்சியில் அவர் கம்பீரமாக இருந்தாலும், அவர் பின்னாடியே சேட்டை செய்வது போல் நடித்திருந்த நாகேஷின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. சிவாஜியே இவரின் நடிப்புக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், படத்தை பார்த்த சிவாஜி, அதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தபோது, நாம் ஓவராக நடித்துவிட்டோம். கட் செய்துவிட போகிறார் என்று நாகேஷ் பயந்துள்ளார். ஆனால் சிவாஜி அப்படி செய்யவில்லை.

Advertisment
Advertisements

மாறாக ஏ.பி.நாகராஜன் சார் நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறான். அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட நாகேஷ் அண்ணா நீங்கள் கட் செய்தவிடுவர்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி செய்யவில்லை என்று மகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதேபோல், சிவாஜி கணேசன் இறந்தபோது என்ன செய்வது என்று தெரியாத நாகேஷ் சிவாஜியின் வீட்டில் ஒரு மூலையில் பாவமாக படுத்து கிடந்துள்ளார். இது குறித்து கேட்டபோது இனிமேல் எனக்கு யார் இருக்கிறார் என்று கேட்டு அழுதுள்ளார். இந்த தகவலை நடிகர் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Nagesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: