ட்ராவல் பண்ணணுமா? இவர்ட வழி கேளுங்க; 90-களில் கூகுள் மேப் போட்ட நடிகர்: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மரணம்!

உண்மையாக பெயர் மறந்து டவுசர் பாண்டி என்றால் தான் அடையாளம் தெரியும் அளவுக்கு அவரது கேரக்டர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை.

உண்மையாக பெயர் மறந்து டவுசர் பாண்டி என்றால் தான் அடையாளம் தெரியும் அளவுக்கு அவரது கேரக்டர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை.

author-image
WebDesk
New Update
Thullatha Man

சினிமாவில் ஆண்டுதோறும் பல நடிகர்கள் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டும் ஒரு படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து காலம் கடந்தும் நிலைத்து நிற்பார்கள். அந்த வகையிலான ஒரு நடிகர் தான் பாரி வெங்கட்.

Advertisment

இயக்குனர் எழில் முதல்முறையாக அறிமுகமான படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜய் சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் விஜய் நடித்த குட்டி கேரக்டர் இன்றுவரை பேசப்படும் ஒரு கேரக்டரான நிலைத்திருக்கிறது.

அதேபோல் பார்வையற்ற பெண் ருக்மணி கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் சிம்ரன். விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், 200 நாட்கள் தியேட்டர்களில் ஓடி பெரிய வெற்றிப்படமாக அமைந்து இயக்குனர் எழிலுக்கு, முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இயக்குனர் என்ற பெருமையை பெற்று தந்தது. காலம் கடந்து நிலைத்திருக்கும் இந்த படத்தில் காமெடியில் அசத்தியவர் தான் பாரி வெங்கட்.

அவர் என்ன கேரக்டரில் நடித்தார் என்று கேட்கிறீர்களா? டவுசர் பாண்டி என்ற கேரக்டரில் ஏரியா ரவுடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியவர் தான் பாரி வெங்கட். அவரின் உண்மையாக பெயர் மறந்து டவுசர் பாண்டி என்றால் தான் அடையாளம் தெரியும் அளவுக்கு அவரது கேரக்டர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை. துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு பிறகு, பிரபு நடிப்பில் வெளியான திருநெல்வேலி படத்தில் நடித்திருந்தார் பாரிவெங்கட்.

Advertisment
Advertisements

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவர், 3 நாட்கள் ஆகியும் வீட்டுக்கு வராத நிலையில், அவரது உறவினர்களும் நண்பர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர். ஒரு கட்டத்தில், ஒரு வார தேடலுக்கு பிறகு பாரி வெங்கட், பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்து, அங்கு சென்று பார்த்துள்ளனர். அதன்பிறகு அவரது உடலை மீட்ட சக காமெடி நடிகர்கள் இறுதி மரியாதை செய்துள்ளனர். இவரது மரணம் குறித்து அறிந்த நடிகர் விஜய் அப்போது தனது அப்படி எஸ்.ஏ.சியுடன் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரது மனைவிக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

ஆன்தி ஸ்பாட்டில் காமெடி காட்சிகளை எழுதி அசத்தும் திறன் கொண்ட பாரி வெங்கட் விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகராக இருந்துள்ளார் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கூட அந்த கறிக்கடை காமெடி, லைட் ஹவுஸ்க்கு ரூட் சொல்லும் காமெடிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அவரது மரணம் தமிழ் சினிமாவுக்கு உண்மையில் பெரிய இழப்பு தான் என்று சொல்லலாம்.  

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: