நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது இந்த ரயில் குறித்த புகார்களும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் வந்தே பாரத் ரயிலில் உணவு சரியில்லை என்று இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து தனது சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான படங்களை கொடுத்து வெற்றி கண்டவர் பார்த்திபன். தற்போது இயக்கம் மற்றும் நடிப்பு என பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் மத்திய அரசின் வந்து பாரத் ரயிலில் உணவு சரியில்லை என்று சக பயணிகள், பேசிக்கொண்டிருந்த நிலையில், இது குறித்து தான் புகார் அளித்துள்ளதாக அந்த புகாருடன் தனது சமூகலைதளத்தில் பதிவிட்டுள்ளார்,
அவர் எழுதி கொடுத்துள்ள புகாரில், உணவு பறிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். ட்ரெய்ன் சுதந்திரமாக இருந்தது. ஆனால் இரவு (19.22) உணவு மற்றும் கிச்சன் மிகவும் மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகை வாங்கிக்கொண்டு இப்படி பறிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம் என்று எழுதியுள்ளார். இந்த புகார் குறித்து பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. சார் அதை கமெண்ட் (comment) செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் கம்ளைண்ட் புக் (complaint book)ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென… என்று பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வந்தாலும், அவ்வப்போது இது போன்ற புகார்கள் குவிந்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“