Advertisment

நொடிந்து கிடந்த வில்லன் நடிகருக்கு எஸ்.ஏ.சி மூலமாக உதவிய விஜயகாந்த்: 'கண்ணுல ஆனந்தக் கண்ணீர் வந்துடுச்சு!'

வாய்ப்பு இல்லாத ஒரு கலைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அவர் எதிர்பார்த்ததை விட பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார் விஜயகாந்த்.

author-image
WebDesk
New Update
The Captains exit Express View on Vijayakanth in tamil
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கால் உடைந்து ஒரு வருடமாக வீட்டில் முடங்கி கிடந்த வில்லன் நடிகர் ஒருவருக்கு, தனது படத்தில் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த், படத்தின் இயக்குனர் மூலம் அவருக்கு பெரிய சம்பளம் பெற்று கொடுத்துள்ளார் என்று அந்த வில்லன் நடிகரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர் விஜயகாந்த் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில் சக நடிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். தற்போது அவர் இல்லாத நிலையில்சக நடிகர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்த் செய்த உதவிகள் அவரின் மனப்பக்குவம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் பொன்னம்பலம் தனது தங்கை திருமணத்திற்கு விஜயகாந்த் செய்த உதவி குறித்து பேசியுள்ளார்.ம் ஆண்டு பிரபு ரகுவரன் நடிப்பில் வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பொன்னம்பலம்பல்வேறு படங்களில் அடியாள் மற்றும் வில்லன் நடிகராக நடித்து முத்திரை பதித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

கலியுகம் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பொன்னம்பலம், ஒரு கட்டத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஒரு வருமாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்துள்ளார். அப்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்று அவரை பார்த்தபோது, புதிய படம் ஒன்று எடுக்க போகிறோம். அதில் உனக்கு ஒரு கேரக்டர் இருக்கு. அதற்காக சம்பளம் பிக்ஸ் பண்ணிருக்கோம்.. உனக்கு சரி என்றால் சொல்லு இந்த சம்பளம் சரியாக இருக்காது என்றாலும் சொல்லிவிடு என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட பொன்னம்பலம், ஒரு வருடமாக வீட்டில் இருந்ததந்கு ஒரு ரூ50 ஆயிரம் கடன் உள்ளது அவ்வளவு கிடைத்தால் போதும் என்று நினைத்துள்ளார். அதன்பிறகு மீண்டும், இந்த படத்திற்காக விஜயகாந்த் உனக்கு ஒரு சம்பளம் பிக்ஸ் செய்திருக்கிறார் என்று கூறி ஒரு செக்கை கையில் கொடுத்து, இதை இப்போது பிரிக்க வேண்டாம் வீட்டில் போய் பிரித்து பார், இங்கு பிரித்து பார்த்து, பிடிக்கலனா முகத்தை சுருக்கி வைத்துக்கொள்ளாதே அது சரியாக இருக்காது என்று கூறிய எஸ்.ஏ.சி, கூடவே அக்ரிமெண்ட் பத்திரத்தையும் கொடுத்துள்ளார்.

அதை பிரித்து பார்த்துவிட்டு, ஓகே என்றால் இதில் சைன் பண்ணி கொடு என்று சொல்ல, பொன்னம்பலம், நேராக செக்கை வீட்டுக்கு எடுத்துச்சென்று, சாமி கும்பிட்டுவிட்டு, 4 நாட்களுக்கு பிறகு பிரித்து பார்த்துள்ளார். அதில் அட்வான்ஸ் பணமாக ரூ1 லட்சம் எழுதியிருந்தது. முழு சம்பளமே ரூ50 ஆயிரம் கிடைத்தால் போதும் என்று நினைத்த பொன்னம்பலம் இப்போது முழு சம்பவம் 2.75 லட்சம், அதற்கு அட்வான்ஸ் ஒரு லட்சம் என்றதும் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இந்த தகவலை பொன்னம்பலமே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த படம் 1993-ம் ஆண்டு வெளியான செந்தூரப்பாண்டி திரைப்படம். இந்த படத்தில் விஜய் விஜயகாந்த் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். பொன்னம்பலம் முக்கிய வில்லனாக நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment