/indian-express-tamil/media/media_files/2025/08/19/muthu-urvasi-2025-08-19-17-43-49.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்துடன் அதிகம் பழகிய உதவி இயக்குனர் என்றால் அது நான் தான் என்று இயக்குனரும், நடிகருமான ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இயக்குனரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணனின், சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய ரமேஷ் கண்ணா, கதை விவாதத்தின்போது ரஜினிகாந்த் காலையிலே ஆபீஸ் வந்துவிடுவார். அவருடன் அதிகமாக பழகிய அசிஸ்டன்ட் டைரக்டர் என்றால் அது நான் ஒருத்தனாகத்தான் இருப்பேன். கோச்சடையான், ராணா, முத்து, படையப்பா என 4-5 படங்களில் அவருடன் வேலை செய்திருக்கிறேன். இந்த படங்களின் பணிகள் நடந்தபோது காலையிலே நாங்கள் மீட் பண்ணுவோம்.
ரஜினிகாந்த் காலையில் ஆபீஸ் வந்தால், மலையில் தான் வீட்டுக்கு போவார். அப்போது நான் எதையும் விட்டுக்கொடுப்பமாட்டேன். நான் ஒரு சீன் சொல்வேன். கே.எஸ்.ரவிக்குமார் ஒரு சீன் சொல்வார். நான் எனக்கு புடிக்கல என்று சொல்வேன். அதற்கு அவர், டேய் நீ என்ன சொல்றது என்று திட்டுவார். எங்களுக்குள் தகராறு நடக்கும். இதை பார்த்து ரஜினிகாந்த் உங்க தகராறை அப்புறம் வச்சிக்கோங்க, முதலில் கதையை முடிப்போம் என்று சொல்வார். ரஜினி ரொம்ப பிளெக்ஸிப்லான பர்சன்.
படத்திற்கு நிறைய சீன்ஸ் சொல்லுவார். படையப்பா கதையே அவர் சொன்னது தான். ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா சீன் சொல்லுவார். ஒரு கதையை சொல்லிவிட்டு இதை ரெடி பண்ணுங்க என்று சொன்னார். நாங்கள் போய் கதையை ரெடிய்பண்ணிட்டோம். ஆனால் நாங்கள் வேறு மாதிரி கதையை சொல்லிட்டோம். அதை கேட்ட அவர் நன்றாக இருக்கிறது. பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, ஒரு படம் பாருங்க என்று போட்டு காட்டினார். அந்த படம் தான் தென்மாவின் கொம்பேத்.
அந்த படத்தில் ஒன்றுமே இல்லை. அந்த கேரளா எபிசோடு மட்டும் தான் இருக்கு. அதன்பிறகு தான் தெரியும் அவர் லைன் கொடுத்தது இந்த படம் என்று. அப்புறம் சொன்னேன் ஏன் சார் முன்னாடியே காட்டியிருக்கலாமே நான் மோகன்லால் ஃபேன் சார் என்று சொன்னேன். ஆனால் அதை காட்டியிருந்தால் அப்படியே பண்ணிருப்பீங்க, அதனால் தான் காட்டவில்லை என்று சொன்னார். அதன்பிறகு அந்த கதையில் அற்புதமாக பண்ணினார். படத்தில் அனைத்துமே மாற்றியச்சு. அந்த ப்ளாஷ்பேக்கில் வயதான தோற்றம், முத்துவுக்கும் தேன்மாவின் கொம்பேத்க்கும் சம்பந்தமே இல்ல.
இந்த படத்தில் சரத்பாவுக்கு ஜோடியாக சுபாஷினி நடித்திருந்தார். அவரது கேரக்டருக்கு முதலில் ஊர்சியிடம் பேசினோம். இதை கேள்விப்பட்ட ரஜினி சார், ஊர்வசி எந்த மாதிரியான கேரக்டர் பண்றாங்க, அவங்கள போய் 2-வது நாயகி கேரக்டரில் நடிக்க வைக்க முடியுமா? என்று கேட்டார்.பிறகு எங்களை சொல்ல விடாமல் அவரே போய் ஊர்வசியிடம் பேசினார். இந்த கேரக்டர் சின்ன கேரக்டர் என்று அவரிடம் பேசி ரஜினி அந்த படத்தில் அவரை நடிக்க விடாமல் செய்தார் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.