Advertisment

''பண்டிகை நாள்ல அதிகாலையே இப்படியா''... கேட்டை திறந்து உள்ளே விடுங்க : ரஜினிகாந்தின் பக்கத்து வீட்டுப் பெண் ஆவேசம்

தைமாதம் முதல்நாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Neighbour

ரஜினிகாந்த் பக்கத்து வீட்டு பெண்மணி ஆவேசம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை பார்க்க அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் கூட்டம் திரண்டதால், அக்கம்பக்கத்தினர் பெரும் சிரமத்திற்கு உள்ளானதை தொடர்ந்து அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், ஜெயிலர் படத்திற்கு பின் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ள நிலையில், தொடர்ந்து மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குனர்களுடன் இணைய உள்ளார். 72 வயதிலும் அயராது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்தை பார்க்க, அவரது ரசிகர்கள் அவ்வப்போது அவரது வீட்டிலும் படப்பிடிப்பு தளத்திலும் கூடுவது வழக்கமான ஒன்று.

அதேபோல் பண்டிகை தினம் என்றால், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தவீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடுவதும், அவர் வீட்டின் மாடியில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து அவர்களை பார்ப்பதும் வழக்கமான நிகழ்வு. அந்த வகையில் தைமாதம் முதல்நாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

இந்த நேரத்தில் ரஜினிகாந்த் வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில், ரசிகர்கள் அனைவரும் வெளியில் நின்றதால், பக்கத்து வீட்டின் வாசலிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கோபமாக பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி ஒருவர், ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் அவரது வீட்டு பாதுகாவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தலைவரா இறைவானு சொல்லிட்டு வருவாங்க, எங்களை மாதிரி ஒருத்தரும் இங்கு கஷ்டப்பட மாட்டார்கள். அவரை பார்க்க வருபவர்களை கேட்டை திறந்து உள்ளே விடுங்கள். உங்க கேட்டை திறக்க மாட்டீங்க ஆன நாங்கள் எங்க வாசலை இப்படி மூடி வைக்கணும் என்ன நான்சன்ஸ் இது? உங்க வீட்டை திறந்து எல்லோரையும் உள்ளே விடுங்க. தலைவர் வீட்டை பார்க்கட்டும். அன்னைக்கு அந்த அம்மா ராத்திரை 10 மணிக்கு ப்ரஸ் கான்ஃப்ரன்ஸ் கொடுத்தங்க இல்ல!

நாங்களும், டேக்ஸ் கட்ரோம் ஆனால் எங்களுக்கு எந்த அட்வான்டேஜூம் இல்லை. போதாகுறைக்கு பண்டிகை அன்று இந்த மாதிரி அதிகாலையிலே கூட்டமா வந்து இப்படி பண்றீங்க. சாமி கும்பிட முடியல வேற எதுவும் பண்ண முடியல என்று வேதனையுடன் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் வீட்டின் மாடியில் இருந்து கை காட்டும் நடிகர் ரஜினிகாந்த் இன்று வீட்டிற்கு வெளியில் வந்து ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment