/indian-express-tamil/media/media_files/2025/04/30/tFOJiy0KCNzJhrNTdbnU.jpg)
இன்றைய இளைஞர்கள் நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள். நாட்டின் உன்னதமான கலாச்சாரத்தை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து முடித்மதுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
அதேபோல் கூலி மற்றும் ஜெயிலர் படங்களை அடுத்து ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல இளம் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஆக்டீவாக இருக்கும் ரஜினிகாந்த், தற்போது வெளியாகும் படங்களை பார்த்து விட்டு அந்த படங்களை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனிடையே சமீபத்தில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வீடியோவில் அறிவுரை கூறியிருந்த ரஜனிகாந்த் தற்போது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ள ரஜினிகாந்த், 'செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாசாரம், பெருமைகள் பற்றி தெரியாமல் உள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் நமது கலாசார பெருமையை பற்றி அறியாமல் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள். மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாசாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என்று இந்தியா வருகிறார்கள். நாட்டின் உன்னதமான கலாசாரம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.