Advertisment

நிஜம், நம்புங்க... ரஜினிக்கு பிடித்த இயக்குனர் பாலச்சந்தர் இல்லை!

Tamil Cinema Update : கன்னடத்தில் பண்ணையார் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இதன் மூலம் தமிழில் நாயகன் கன்னடத்தில் வில்லன் என ஒரே படத்தில் நாயகன் வில்லன் என்று நடித்திருப்பார்

author-image
WebDesk
New Update
நிஜம், நம்புங்க... ரஜினிக்கு பிடித்த இயக்குனர் பாலச்சந்தர் இல்லை!

Tamil Cinema Update Rajinikanth Update : தன்னை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குந் கே.பாலச்சந்தரை விட தன்னை வைத்த 2 படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும், திரையுலகில் அவர்தான் தனக்கு பிடித்தமான இயக்குநர் என்று நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மகேந்திரனை குறிபபிட்டுள்ளார்.  

Advertisment

தமிழில் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போது முன்னணி இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்திருந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் இவரை அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தின் இவருடன் கமல்ஹாசன் இணைந்து நடித்திருப்பார். அதன்பிறகு பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருந்த ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சினிமா இயக்குநர் சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில், ரஜினியை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் கே.பாலச்சந்தர், ரஜினிகாந்திடம் சில கேள்விகள் கேட்டிருந்தார். அப்போது தமிழ் சினிமாவில் பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சற்றும் யோசிக்காமல் இயக்குநர் மகேந்திரன் என்று பதில் அளித்திருப்பப்பார்.

தொடக்கத்தில் இருந்து கொஞ்சம் கமர்ஷியல் படங்களாக நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்தை கதையின் நாயகனாக உருவாக்கிய பெருமை இயக்குநர் மகேந்திரனையே சாரும். 1978-ம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் படமே இயக்குநர் மகேந்திரன் ரஜினிகாந்த் இணைந்த முதல்படம். இந்த படத்தில், ஷோபா, சரத்பாபு படாட் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லாம்.

publive-image

தாய் தந்தை இல்லாத தனது தங்கை மீது அதீத பாசம் வைத்திருக்கும் ஒரு அண்ணின் பாசப்போராட்டத்தை அடிப்படையாக கொண்ட இந்த கதையில், தங்கையாக நடித்திருந்த ஷோபா ரஜினிக்கு பிடிக்கா சரத்பாபுவை காதலிக்கிறார். ஆனால் இதை பிடிக்காத ரஜினி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கிடையே போதையில் தனது மேலதிகாரியான சரத்பாபு தன்னை வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்துவிட்ட விரக்தியில் குடித்துவிட்டு சாலையில் படுத்திருக்கிறார் ரஜினி.

அப்போது லாரி மோதி விபத்தில் சிக்கிய அவரை சரத்பாபு மருத்துவனையில் சேர்க்கிறார். இந்த விபத்தில் ரஜினியின் கை பறிபோகிறது. அதுவரை ஊரில் கெத்தாக சுற்றிக்கொண்டிருந்த ரஜினியை ஊரார்கள் அனைவரும் ஏளனமாக பார்க்கின்றனர். இதற்கிடைய தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினியை மீறி ஷோபாவை சரத்பாபுவிற்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர்

publive-image

இதற்கு ஷோபாவும் சம்மதித்து அவர்களுடன் செல்ல, வழியில் அண்ணனை பார்த்ததும் தனக்கு அண்ணன்தான் முக்கியம் என்று அவருடன் இருந்து விடுகிறாள். அதன்பிறகு தனக்கு விருப்பம் இல்லை என்றாலும் தங்கையின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார். படத்தின் முதல பாதியில் கெத்தாக ஊரில் அனைவரையம் அதட்டிக்கொண்டு பலருக்கும் உதவி செய்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் 2-ம் பாதியில் கையை இழந்து தன் தேவைகளையே பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் கெட்ட பய சார் இந்த காளி என்ற வசனம் பெரிய வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்த படம் ஜானி ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படம் கமர்ஷியல்அம்சங்களுடன் வெளியானது. இதில் ஸ்ரீதேவி ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். தொடர்ந்து இந்த மகேந்திரன் ரஜினி கூட்டணி மீண்டும் இணைந்த படம் கை கொடுக்கும் கை. கடந்த 1984-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், ரேவதி, ஒய்.ஜி.மகேந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினி ஒரு முன்னணி நடிகராக இருந்தாலும் இந்த படத்தின் கதை நாயகி ரேவதியை சுற்றிய பின்னப்பட்டிருக்கும்.

publive-image

பார்வையாற்ற மாற்றுத்திறனாளியாக ரேவதியை வீட்டில் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொள்கிறார் ரஜினி. நடிகர் விஜயகுமார் தயாரித்திருந்த இந்த படம் ரஜினியின் இன்னொரு பரினாமத்தை வெளிப்படுத்தியது. கன்னடத்தில் வெளியான கதா சங்கமா என்ற படத்தில் இடம்பெற்றிருந்த 3 கதையில், முனிதாயி என்ற கதையை தமிழுக்கு ஏற்றபடி மெருக்கேற்றி கொடுத்தவர் மகேந்திரன். இந்த படத்தில் மாற்றுத்திறனாளியான ரேவதியை அந்த ஊர் பண்ணையார் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்.

ஆனால் இதே கதையில் கன்னடத்தில் பண்ணையார் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இதன் மூலம் தமிழில் நாயகன் கன்னடத்தில் வில்லன் என ஒரே படத்தில் நாயகன் வில்லன் என்று நடித்திருப்பார் ரஜினிகாந்த். யதார்த்தமான கதையை தனக்கே உரிய பாணியில் உண்மை தன்மையுடன் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், ரஜினியை தனக்கு கதைக்கு தேவையான நாயகனாக மாற்றியிருப்பார். இளையராஜாவின் இசையில் இந்த படம் சிறந்த பாடல்களை கொடுத்திருந்தது. மேலும் சின்னி ஜெயந்த் மாற்றுத்திறனாளியாக இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருப்பார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment