நீ இல்லாம 3 நாள் ஆச்சுப்பா, அதிகமா சிரிக்க வச்ச, இப்போ அதை விட அதிகமா அழ வச்சிட்டியே: இந்திரஜா உருக்கம்!

தந்தையின் இழப்பைத் தாங்க முடியாமல் ரோபோ சங்கர் மகள். நடிகை இந்திரஜா சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தந்தையின் இழப்பைத் தாங்க முடியாமல் ரோபோ சங்கர் மகள். நடிகை இந்திரஜா சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Robo shankar

தமிழ் சினிமா மற்றும சின்னத்திரையில் தனது காமெடியின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைதத நடிகர் ரோபோ சங்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது அப்பாவை இழந்த இந்திரஜா சங்கர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு பலரையும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Advertisment

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். விஜயகாந்த் நடிப்பில் வெளியான தர்மசக்கரம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், படையப்பா, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்ற படம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படம் தான். இதில் அவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அதேபோல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாய் மூடி பேசவும் படமும் இவரது காமெடிக்கு அடையாளமாக இருக்கிறது. இடையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்த ரோபோ சங்கர் அதன்பிறகு உடல்நிலை தேறி, மிஸ்டர் மதுரை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில்,திடீரென மயக்கமடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 18-ந் தேதி ரோபோ சங்கர் மரணமடைந்தார். முன்னணி நடிகர்கள் முதல் சின்னத்திரை நடிகர்கள் பலரை பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisment
Advertisements

இதனிடையே, தந்தையின் இழப்பைத் தாங்க முடியாமல் ரோபோ சங்கர் மகள். நடிகை இந்திரஜா சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், அப்பா...நீங்கள் இல்லாமல் 3 நாள்கள் ஆகிவிட்டது. எங்களை அதிகமாக சிரிக்க வெச்சதும் நீங்கள்தான், இப்போது அதிகமாக அழ வைப்பதும் நீங்கள்தான். இந்த 3 நாள்கள் எனக்கு உலகமே தெரியவில்லை, நீங்கள் இல்லாமல் குடும்பத்தை, நாங்கள் எப்படி கொண்டு செல்லப் போகிறோம் என்பது தெரியவில்லை.

ஆனால் நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்ததுபோலக் கண்டிப்பாக நான் பலமாக இருப்பேன். விமர்சனங்களுக்கு பயப்பட மாட்டேன் பா. உங்களை பெருமைப்படுத்துவேன் பா" என்று பதிவிட்டுள்ளார். இந்திரஜாவின் பதிவுக்கு, அவருடைய ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இந்திரஜா அடுத்து விருமன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

Robo Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: