தனியா இல்ல தளபதியோட வந்துருக்கேன்... மீண்டும் சன் டிவி சீரியலில் பிரபல நடிகர்: வைரல் ப்ரமோ

தமிழ் சினிமா நடிகர், சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர் என திரையுலகில் பலராலும் அறியப்பட்ட நடிகர் சஞ்சீவ் வெங்கட்,

தமிழ் சினிமா நடிகர், சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர் என திரையுலகில் பலராலும் அறியப்பட்ட நடிகர் சஞ்சீவ் வெங்கட்,

author-image
WebDesk
New Update
Vanathai Pola Sanjeev

வானத்தைபோல சீரியல்

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட கிழக்கு வாசல் சீரியலில் லீடு ரோலில் நடிக்க இருந்த நடிகர் சஞ்சீவ் வெங்கட் அந்த சீரியல் தொடங்கும் முன்பே அதில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், தற்போது சன் டிவியின் வானத்தைபோல சீரியலில் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமா நடிகர், சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர் என திரையுலகில் பலராலும் அறியப்பட்ட நடிகர் சஞ்சீவ் வெங்கட், 1989-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச்செல்வன் படத்தில் கவுண்டமணியின் மகனாக திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்கில் முக்கிய கேரக்டரில் நடித்த சஞ்சீவ் வெங்கட், 2002-ம் ஆண்டு மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அந்த சீரியல் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில், அடுத்து நம்பிக்கை, பணம், அண்ணாமலை, அவர்கள், தற்காப்பு கலை தீர்ந்ததா, ஆனந்தம், அகல்யா, மனைவி, வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், சூப்பர் பாய், கஸ்தூரி, சாரதா சூர்யா, பெண், கண்மணி, சித்தி 2 உள்ளிட்ட பல சீரியலிகளில் நடித்திருந்தார். இதில் 'திருமதி செல்வம் (2007-2013)' சீரியலில் சஞ்சீ்வ் நடித்த செல்வம் என்ற கேரக்டர் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடைசியாக கலர்ஸ் தமிழின் கண்டநாள் முதல் சீரியலில் நடித்த சஞ்சீவ் வெங்கட் தற்போது சன் டிவியின் முக்கிய சீரியலான வானத்தை போல சீரியலில் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். ஸ்ரீகுமார் கணேஷ் மற்றும் ஸ்வேதா கெல்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், ப்ரீத்தி குமார், அஷ்வந்த், திலக், அஷ்வின் கார்த்தி, சந்தோஷ் டேனியல், செந்தில் குமாரி, தக்ஷனா, மனோஜ் குமார், தக்ஷாயினி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

சின்ராசு மற்றும் அவரது சகோதரி துளசி இடையேயான நெருங்கிய பாசப்பிணைப்பை அடிப்படையாக வைத்து திரைப்பதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், தற்போது துளசி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், இருவரும் இணைவார்களா அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வீர சிங்கம் என்ற போலீஸ் கேரக்டரில் தற்போது சஞ்சீவ் என்ட்ரி ஆகியுள்ளார். துளசியின் கணவரும் மாமனாரும்  சின்ராசுவை அடிக்க போக அப்போது என்டரி ஆகும் வீரசிங்கம் இனிமேல் என்னால் தான் உங்களுக்கு பிரச்சனை அதிகரிக்க போகிறது என்று சொல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Vanathai Pola Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: