Advertisment

பணத்திற்காக திருமணம்? வரலட்சுமி பற்றி தப்பு தப்பாக பேசுவதா? சரத்குமார் கோபம்

தனது மகளின் திருமணம் தொடர்பாக வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சரத்குமார் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Viru Nikolai

வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச்தேவ்

தனது மகள் மற்றும் தனது குடும்பம் குறித்து அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகர் சரத்குமார், நேர்காணல் ஒன்றில் பல்வேறு கேள்விகளை எழுப்பியள்ளது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

90-ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சரத்குமார். வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவகா உயர்ந்த இவர் தற்போது பல படங்களில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் வெளியான போர்தொழில், பரம்பொருள், ஹிட்லிஸ்ட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தனது திருமண வாழ்க்கையில் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்ட சரத்குமார், ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2001-ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதில் சரத்குமார் சாயா தேவி தம்பதிக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி வில்லி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி, பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிக்கோலாய் சச்தேவ் என்பரை காதலிப்பதாக அறிவித்த வரலட்சுமி, அவருடன் நிச்சயதார்த்தம் செய்த நிலையில், கடந்த ஜூலை 2-ந் தேதி தாய்லாந்தில் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிக்கோலாய்க்கு 15 வயதில் மகள் இருக்கும் நிலையில், வரலட்சுமி அவரை திருமணம் செய்துகொள்வது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

தொடக்கத்தில் இருந்தே தன்னைப்பற்றி வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வரும் வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் குறித்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வந்தார். ஆனாலும் அந்த விமர்சனங்கள் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. அந்த தற்போது வரலட்சுமி நிக்கோலாய் திருமணம் செய்துகொண்டது பணத்திற்காகத்தான். இந்த திருமணத்திற்காக ரூ800 கோடி வரை சரத்குமார் செலவு செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது நேர்காணல் ஒன்றில் சரத்குமார் பேசியுள்ளார்.

நானும் சமூகவலைதளங்களை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சிலர் தங்களுக்கு நேரம் போக வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை விமர்சித்து வருகின்றனர். இப்படி மறைந்திருந்து பேசுபவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது. தைரியம் இருந்தால், நேரில் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு, தன்னிடம் இணையதள வசதி இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் கமெண்ட் போலாமா? என் மகளுக்காக நான் பேசவில்லை. ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன்.

அடுத்துவர்களை பற்றி உங்களுக்கு தோன்றியதை எல்லாம் பேசும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? நான் பொதுவாக இந்த மாதிரியான கருத்துக்களை கண்டுகொள்வது கிடையாது. ஆனால் ஒரு சிலர் இந்த மாதிரியான கருத்துக்களை மனதில் ஏற்று்ககொண்டு கஷ்டப்படுகிறார்கள். எதற்காக அடுத்தவர்களை இப்படி கஷ்டப்படுத்த வேண்டும்? என் மகள் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டதாக சில கூறுகிறார்கள். அதற்கு நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

உண்மையில் வரலட்சுமி திருமணம் எதற்காக செய்துகொண்டார் என்பது அவரது முடிவு. நிக்கோலாயை மனதார பிடித்துபோய் அவர் திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் விவகாரம் தெரிந்தவுடன், மனதளவிலும், உடலளவிலும், பணத்தளவிலும் வாழ்க்கையில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்று நினைத்தேன். நிக்கோலாயிடம் பேசியபிறகு எனக்கு பிடித்தது, அதன்பிறகு இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன். இதை சிலர் தவறாக விமர்சித்து நேரத்தை வேஸ்ட் செய்கிறாாகள் என்று சரத்குமார் கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News R Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment