ஒரு பாடலுக்கு 15 கோடி செலவா?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். தற்காலிகளமாக ஆர்.சி 15 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ரூ 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் நிலையில், இந்த படத்திற்காக நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட ஒரு பாடலுக்கு ரூ 15 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு ஆக்ஷன் காட்சிக்காக 10 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பாடலுக்கு 15 கோடி செலவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்?
தமிழ் சினிமாவில் டார்லிங், மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த நிக்கி கல்ராணி யாகாவராயினும் நாகாக்க படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஆதியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து ஆதி படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பூஜைக்கு முன்பே வசூல் செய்த தளபதி 67
வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட படம் குறித்து நாள்தோறும் பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தளபதி 67 படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், படத்தின் ஒடிடி உரிமத்தை 160 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
100 குழந்தைகள் சிகிச்சைக்கு உதவும் பிரபல நடிகர்
நடிகர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது புதியதாக பிரபல மலையாள நடிகர் தல்கர் சல்மான் இணைந்துள்ளார். இவர் ஒரு அறக்கட்டளையுடன் இணைந்து 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. துல்கரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் இயக்குனராக சசிகுமார்
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் சுப்பிரமணியபுரம், ஈசன் ஆகிய இரு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சுப்பிரமணியபுரம் படம் அவரது நடிப்பு மற்றும் இயக்கத்திற்கு பெரிய பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. ஆனால் ஈசன் படத்திற்கு பிறகு படம் இயக்காத சசிகுமார் நடிப்பில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து அவர் நடிப்பில் நாளை நான் மிருகமாய் மாற, அடுத்த வாரம் காரி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.இதனிடையே சசிகுமார் மீண்டும் தனது இயக்குனர் பணியை கையில் எடுத்துள்ளார். அதே சமயம் நான் இயக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil