New Update
/indian-express-tamil/media/media_files/9UsZdllpIU76lyZKgcjW.jpg)
நடிகர் சிபிராஜ் பண்ணை வீடு - கோயம்புத்தூர்
நடிகர் சிபிராஜ் பண்ணை வீடு - கோயம்புத்தூர்
தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் பண்ணை வீடு கட்டியுள்ள நடிகர் சத்யராஜூவின் மகன் சிபிராஜ் தனது வீட்டுக்கு கிரகபிரவேஷம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வில்லனாக மாறி பின்னாளில் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சத்யராஜ். அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நாயகனாக உயர்ந்த சத்யராஜ் இயக்குனரும் நடிகருமான மணிவண்ணனுடன் இணைந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சத்யராஜூவின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் சிபிராஜ். 2003-ம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிபிராஜ், தொடர்ந்து மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், உள்ளிட்ட சில படங்களில் தனது அப்பா சத்யராஜூவுடன் இணைந்து நடித்த சிபிராஜ், அதன்பிறகு லீ, நாணயம், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2010-ம் ஆண்டு சிபி நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து ஜாக்சன்துரை, கபடதாரி, சத்யா, ரங்கா என வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்து நடித்த சிபிராஜ் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான மாயோன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மாயோன் 2 படம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சிபிராஜ் தனது சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவடடம் வளவாடி பகுதியில் பண்ணை வீடு ஒன்றை கட்டியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வீட்டின் கிரகபிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிபிராஜ்யை அடிக்கடி உடுமலைப்பேட்டையில் பார்க்கலாம் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.