ரஜினியுடன் நடிக்க, பிரபல இயக்குனரிடம் வாட்ஸ்அப்பில் வாய்ப்பு கேட்ட சித்தப்பு: இளமையை சினிமாவில் தொலைத்ததாக உருக்கம்!

2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார், இந்த படத்தில் அவர் நடித்த சித்தப்பு கேரக்டர் இன்றுவரை அவரின் அடையாளமாக மாறிவிட்டது.

2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார், இந்த படத்தில் அவர் நடித்த சித்தப்பு கேரக்டர் இன்றுவரை அவரின் அடையாளமாக மாறிவிட்டது.

author-image
WebDesk
New Update
tamil Cinema Saravanan

சினிமாவில் தன்னை ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக வெளிப்படுத்தி வரும் நடிகர் சித்தப்பு சரவணன், நானே இதுவரை யாரையும் தேடிப்போய் வாய்ப்பு கேட்கவில்லை. எல்லா வாய்ப்பும் என்னை தேடி வந்தது. ஆனால் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக, ஒருவரிடம் வாட்ஸ்அப்பில் வாய்ஸ் அனுப்பி வாய்ப்பு கேட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், 1991-ம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சரவணன். தொடர்ந்து, பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, பார்வதி என்னை பாரடி, விஸ்வநாத், சந்தோஷம் என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். 2003-ம் ஆண்டு தாயுமாணவன் என்ற படத்தை இயக்கிய நடித்த சரவணவன், அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார்.

தொடர்ந்து 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார், இந்த படத்தில் அவர் நடித்த சித்தப்பு கேரக்டர் இன்றுவரை அவரின் அடையாளமாக மாறிவிட்டது. வெறும் சரவணன் என்று சொன்னால் தெரியாது. இப்போது சித்தப்பு சரவணன் என்றால் தான் பலருக்கும் தெரியும் அளவுக்கு அந்த கேரக்டர் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன்பிறகு வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமீபத்திய ஒரு நேர்காணலில், நான் ஒரு இயக்குனரை தவிர மற்ற யாரிடமும் வாய்ப்பு கேட்டதே இல்லை என்று கூறியுள்ளார். அந்த இயக்குனர் வெறு யாரும் இல்லை. ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் தான். இது குறித்து பேசியுள்ள அவர், ரஜினி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று நெல்சனிடம் மட்டும் தான் நான் வாய்ப்பு கேட்டேன். நெல்சனுக்கு வாட்சப்பில் வாய்ஸ் போட்டேன். நான் ரஜினி சாரின் ரசிகர்கள் என்று சொன்னேன். அதன்பிறகு யாரிடமும் நான் வாய்ப்பு கேட்கவே இல்லை.

Advertisment
Advertisements

வாய்ப்பு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஹீரோவானதேவ வாய்ப்பு கேட்டு வரவில்லை. வாய்ப்பு என்னை தேடி வந்தது. திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது ஷூட்டிங் நடந்தது. அதை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த படத்தின் இயக்குனர் என்னை பார்த்து இவன் தான் அடுத்த பட ஹீரோ என்று சொன்னார், என்னை தானாக தேடி வந்த வாய்ப்பு. ஹீரோவா நான் உயரத்திற்கு போனேன். அப்புறம் நானே விழுந்தேன்.

ஏன் உயரத்திற்கு போனேன், ஏன் விழுந்தேன் என்பதற்கு எனக்கு விடை தெரியவில்லை. 40 வருடங்கள் கழித்து தான் தெரிந்தது, சினிமாவில் என் இளமையை தொலைத்துவிட்டேன் என்று சித்தப்பு சரவணன் கூறியுள்ளார்.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: