/indian-express-tamil/media/media_files/2025/09/08/sivaji-ganesan-2025-09-08-15-36-36.jpg)
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று பெயரெடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய 3 சகோதரிகளுடன் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அந்த சகோரிகளில் ஒருவருடன் 60 படத்திற்கு மேல் சிவாஜி ஜோடியாக நடித்துள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் சிவாஜி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர், தனது நடிப்பிலும் முத்திரை பதித்திருந்தார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு, கருணாநிதி வசனம் எழுதியிருந்தார், சிவாஜி முதல் படத்திலேயே புகழ் பெற முக்கிய காரணமாக இருந்தது இந்த படத்தின் வசனங்கள் தான்.
இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து, பல தயாரிப்பாளர்கள் சிவாஜியை வைத்து படம் இயக்க வரிசைகட்டி காத்திருந்தனர். அந்த வகையில் சிவாஜி 2-வது படமாக நடித்தது தான் பணம். என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் முதல் முறையாக சிவாஜி – பத்மினி ஜோடி இணைந்து நடித்திருந்தது. சிவாஜி சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே, பத்மினி 1947-ம் ஆண்டு கன்னிகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிவிட்டார்,
பணம் படமும் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து சிவாஜி பத்மினி ஜோடி அடுத்தடுத்து படங்களில் ஜோடியாக நடிக்க தொடங்கினர். பணம் படத்தில், நடித்தபோது சிவாஜிக்கு திருமணம், அன்றைய தினம், முதலில் தாளி கட்டியது பத்மினிக்கு தான். படத்தில் காட்சியில் பத்மினிக்கு தாளி கட்டிய சிவாஜி, அடுத்து தனது மனைவி கமலாவுக்கு ரியாலாக தாளி கட்டியுள்ளார். இது குறித்து பத்மினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் எதிர்பாராதது படத்தில், அவருக்கு சித்தியாகவும் நடித்துள்ளார்.
பத்மினிக்கு, லலிதா ராகினி என இரு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்கள் மூவருமே நடன கலைஞர்கள் என்றபோதும், பல படங்களில் மூவரும் ஒன்றாக நடித்துள்ளனர். அந்த வகையில், 1954-ம் ஆண்டு வெளியான தூக்கு தூக்கி என்ற படத்தில் மூவரும் ஒன்றாக இணைந்து நடித்திருப்பார்கள். இதில் சிவாஜியின் மனைவியாக லலிதாவும், அவரை காதலிக்கும் பெண்ணாக பத்மினியும், நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ராஹினியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
அதேபோல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான மதுரை வீரன் படத்தில், பத்மினி வெள்ளையம்மாள் என்ற கேரக்டரில் நடித்திருந்த நிலையில், லலிதா ராஹினி இருவரும், டான்சர்களாக நடித்திருந்தனர். மேலும் எம்.ஜி.ஆர் நடித்த மன்னாதி மன்னன் படத்தில், பத்மினி, ராகினி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை பத்மினி, 1986-ம் ஆண்டு சினிமா, சினிமா என்ற படத்தில் பத்மினியாகவே நடித்திருப்பார். இதுதான் அவரின் கடைசி படம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.