கல்பனா சாகும்வரை தான் கஜினி பார்ப்பேன்; மதராஸி நடிகை ஓபன் டாக்: இந்த விஷயம் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இயக்கிய வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 5-ந் தேதி படம் வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இயக்கிய வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 5-ந் தேதி படம் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Kalpana Rukmani

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வரும் நிலையில், அவர் இயக்கிய கஜினி படத்தை நான் பாதிதான் பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.

Advertisment

கன்னடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பீர்பால் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ருக்மணி வசந்த். அதன்பிறகு, அப்ஸ்டார்ட்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்த அவர், சப்த சாகர்டாச்சோ இல்லோ பார்ட் 1 மற்றும் 2 ஆகிய இரு படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக உருவெடுத்தார். ரக்ஷித் ஷெட்டி நாயகனாக நடித்த இந்த படத்தின் முதல் பாகம் சைடு ஏ என்றும் 2-ம் பாகம் சைடு பி என்றும் வெளியானது,

இதில் சைடு ஏ காதல் ரொமான்ஸ் என்ற கோணத்தில் சென்ற இந்த படம் சைடு பி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இருந்திருக்கும். கன்னடா கடந்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு பாணடரியலி, பஹீரா, பைரதி ரணகல், ஆகிய கன்னட படங்களில் நடித்த இவர், அப்புடோ இப்புடோ எப்புடோ என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் தமிழில் அறிமுகமான இவர், தற்போ மதராஸி படத்தில் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இயக்கிய வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 5-ந் தேதி படம் வெளியாக உள்ளது. இதனிடையே சினியுலகம் யூடியூப் சேனலில் பேட்டி அளித்த ருக்மணி வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தை நான் பாதிதான் பார்ப்பேன். அதுவும் கல்பணா சாகும்வரை மட்டும் தான் பார்ப்பேன். அதன்பிறகு பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சியில், திரைப்படங்களில் திரும்பவும் இந்த காட்சிகளை பார்க்கவே கூடாது என்று நினைக்கும் காட்சி எது? நீங்கள் நடித்த படமாகவும் இருக்கலாம் மற்ற படமாகவும் இருக்கலாம் என்று கேடக், பஹீரா படத்தில் ஒரு வைலன்ஸ் காட்சி இருக்கிறது. இதை மீண்டும் பார்க்க நினைக்கவில்லை. அதேபோல் கஜினி படம் என் தங்கைக்கு ரொம்ப பிடிக்கும். அந்த படத்தில், கல்பனா சாகும்வரை மட்டும் தான் பார்ப்பேன். அதன்பிறகு பார்க்க மாட்டேன். இதை ஏ.ஆர்,முருகதாஸ் சாரிடம் சொல்ல எனக்கு பயம். என் தங்கை சொல்லிவிடுவாள். நானும் உங்க படம் கஜினி பிடிக்கும் சார். ஆனால் கல்பானா சாவுக்கு பின் பார்க்க மாட்டேன் என சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: