Tamil Cinema Actor Surya Say About Jaubhim Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் ஒடிடி தளத்தில் வெளியாக படம் ஜெய்பீம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில், வன்னியர்கள் குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாமக இளைஞராணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட பாமகவினர் அறிக்கை வெளியிட்டு நீதிமன்றத்தில் புகார் வழக்கு தொடர்ந்தனர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பு இந்த படத்திற்கு ப்ரீ ப்ரமோஷனாக மாறியது. ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் அதிகம் வசூல் சாதனை நிகழ்த்திய படங்களில் பட்டியில் இணைந்தது. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யா இயக்குநர் ஞானவேல் நடிகர் மணிகண்டன் உள்ளிட்ட பலருக்கும் பாராட்டுக்குள் குவிந்தது.
இந்நிலையில், தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் மார்ச் 10-ந் தேதி வெளியா உளளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்காஅருள்மோகன், சரண்யா பொன்வண்ணன் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் வினய் வில்லனாக நடித்துள்ளார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது காதல் ஆக்ஷன், செண்டிமென்ட் உள்ளிட்ட காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது ரசிகர்கள் முன்பு உரையாற்றியுள்ள நடிகர் சூர்ய ஜெய்பீம் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் ஜெய்பீம் படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்புக்கும் இன்னும் அதிகமாக நன்றி சொல்வன். இந்த படம் ஒரு நல்ல எண்ணத்துடன் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் சிலபேருக்கு சில சின்னச்சின்ன சங்கடங்கள் வந்தது. இது தற்காலிகமானது தான்.
ஒருவரை ஒருவர் மனனை புரிந்துகொண்டுள்ளோம் என்று நம்புகிறேன் அதற்கான முயற்சிகள் எல்லாமே எங்கள் பக்கத்தில் இருந்து எடுத்தோம். ஆனால் அந்த நேரத்தில் சில இடங்களில் சில ரசிகர்கள் மன்றங்களில் எனது தம்பிகளுக்கு நிறைய நெருக்கடிகள் வந்தது. அதை நீங்கள் எவ்வளவு பக்குவாக கையாண்டீர்கள் என்பதை நான் பார்த்தக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு பேர் நெருக்கடி கொடுத்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும் இந்த வயதில், நீங்கள் பக்குவமாக அதை கையாண்டதற்கு நான் தலைவணங்குகிறேன். அதனால்தான் சொல்கிறேன் நீங்கள் தான் எதற்கும் துணிந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“