Advertisment

எல்லை மீறிய விஜய் ரசிகர்கள்... மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : என்ன நடந்தது?

நடிகை விஜய் குறித்து மிஷ்கின் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு விஜய் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Leo Mysskin

லியோ - மிஷ்கின்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக மிஷ்கினுக்கு முக்கிய இடம் உண்டு. நரேன் நடிப்பில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், அடுத்து, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

Advertisment

சவரக்கத்தி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் மாறிய மிஷ்கின், சூப்பர் டீலக்ஸ், சுட்டு பிடிக்க உத்தரவு பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாக நடித்த மிஷ்கின், தற்போது விஜயின் லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மிஷ்கின், விஜய் லியோ படத்தை பார்த்துவிட்டதாக கூறி ஒருமையில் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். இதில் ஒரு விஜய் ரசிகர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவில் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்' என தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay Mysskin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment