அரசியல் ஆர்வத்தில் விஜய்... சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா? கோலிவுட் பரபரப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Vijay Leo

லியோ விஜய்

லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி 2-3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் ஒவ்வொரு தொகுதியிலும் முதலிடத்தை பிடித்த மாணவர்களை சந்தித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சென்னையில் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில், மாணவ மாணவிகளிடம் பேசிய விஜய், படிப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள். படிப்பு மட்டும் தான் உங்களை உயர்த்தும் இது மட்டும் தான் உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியா ஒன்று என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பெரியார் அண்ணா காமராஜர் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். புதிய தலைவர்களை உருவாக்கும் சக்தி வருங்கால வாக்காளர்கள் உங்கள் கையில் தான் உள்ளது. வீட்டில் பெற்றோரிடம் பணம் வாங்காமல் ஓட்டு போட சொல்லுங்கள் என்றும் கூறியிருந்தார். விஜயின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

Advertisment
Advertisements

இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்து தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இனி விஜய் அடிக்கடி தனது ரசிகர்களை சந்திப்பார் என்றும், அவர்களுடன் ஆலோசனை செய்து மாவட்ட அளவில் அரசியல் பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு முதல் படியாக விஜய் சினிமாவுக்கு 2-3 ஆண்டுகள் முழுக்கு போட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக தற்போது கமிட் ஆகியுள்ள படங்களை விரைவில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாகத்தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: